நீங்க பெருந்தன்மையா இருந்ததுதான் இதுக்கெல்லாம் காரணம். சாதாரணமா ஒருத்தன் இந்த மாதிரி சொத்து மேலே சொந்தம் கொண்டாடிக்கிட்டு வரதுன்னா கோர்ட் மூலமாகத்தான் வருவான். அப்படி வந்தாலே மத்தவங்களுக்கு வரவன் மேலே ஒரு எதிர்ப்பும் வெறுப்பும் வந்துடும். நீங்க அப்படிச் செய்யாததுதான் உங்க பெருந்தன்மை.