“விஷ்ணு சிலை அறுநூறு கோல் நீளம் உடையது. மூன்று கருவறைகளை நிரப்பியபடி மல்லாந்து கிடக்கிறது. முதல் கருவறையில் பாதம். அடுத்ததில் உந்தி. இறுதியில் முகம். முகவாசல் திறந்திருக்கும்போது இங்கு ஞானசபை கூடும். உந்திவாசல் திறந்திருக்கும்போது தர்க்கசபை கூடும். பாதவாசல் திறக்கப்படும்போதுதான் ஸ்ரீபாதத் திருவிழா. ஒவ்வொரு வாசலும் நான்கு வருடம் திறந்திருக்கும். ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டிச்சென்று, ஞானமுழுமை பெற்ற ஒருவர்தான் விஷ்ணுவை பூரண தரிசனம் செய்ய முடியும் என்று இங்கு வகுக்கப்பட்டுள்ளது.”