ஒவ்வொன்றையும் சர்க்கம், பிரதிசர்க்கம் என்று பிரித்துத் தொகுக்கும் சிந்தனைமுறை. எழுத்தாணிப் புழுபோல இந்தக் காவிய ஏட்டு அடுக்கை ஊடுருவிச் சென்று அடியிலுள்ள மண்ணை, வேர்களும் ஈரமும் உயிர்த்துளிகளும் நிரம்பிய முடிவில்லாத மகாபிரித்வியை, ஜடப் பிரம்மாண்டத்தை, புலன்களுக்கு மாற்றமின்றி சிக்கும் மகத்துவத்தை, மாயைமீது பிரம்மன் ஏற்றிவைத்த மெய்மையைத் தொட்டால்போதும். அதுதான் என் வாழ்வின் இலக்கு. என் இருப்பின் அர்த்தமே அதுதான்.