எதற்காக இந்தத் தியானம்? அறிவதற்கா? எதை? அறிவது எது என்று அறியவா? எப்படி அறிவது என்று அறியவா? அறிந்து என்ன செய்யப்போகிறேன்? வீண். எல்லாம் வீண். அறியமுயலும் என் மனம் வெறும் வான்வெளியில் சிறு புள்போல சுழன்று பறந்தபின் களைத்து மண்ணிறங்கும். வானம் அறியப்படாத விரிவு. வானில் எழும் எல்லாமே அதைத் தொடாது கீழிறங்குகின்றன. அதன் உடல் தொடப்படாத நீலம். அதன் ஆத்மாவோ பகிரப்படாத ரகசியம். அதன் மகத்தான தனிமை.

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)