பயனற்ற ஞானவழி ஏதும் இல்லை. எனவே எந்த ஒரு தரிசனமும் அழிவதில்லை. எனவே எந்த ஞானத்தையாவது ஒருவன் வெறுத்தானென்றால், இழித்துரைத்தானென்றால், அவனுடைய அகத்தில் ஒளி குடியேற முடியாது. இங்கு நடந்த அத்தனை சுபக்க பரபக்கப் பிரிவினைகளும் ஒரு கையின் விரல்கள் பரஸ்பரம் வருடி அறிவது போன்றதாகும்.