எல்லாப் பாதையிலும் துன்பமும் இன்பமும் உள்ளது குழந்தை. அழகின் தரிசனமோ, மனநெகிழ்வின் முதிர்வோ, நீ ஓர் அறிதலின் கணத்தில் அனுபவிக்கும் பரவசத்திற்கு இணையானதுதான். உனது துயரம் மானுட குலமெங்கும் பரவி, காலம்தோறும் தொடர்ந்து வருவது. நான் பாவி என்று கண்ணீர்விடாத ஞானதாகி எங்குள்ளான்?”