ஆலயவிஞ்ஞானம் ஒரு நதி. மனிதப் புலன்கள் அதில் மிதக்கும் ஒரு மீன் போல. நதிக்கரைச் சுவர் ஒன்றில் நீரின் அலை பிரதிபலிக்கிறது. அந்தச் சுவர்தான் நமது மனோவிஞ்ஞானம். நதிமீன் நதியை அறியாது. ஏனெனில் அது நதிக்குள் உள்ளது. அது நதியன்றி வேறின்றி இருக்கிறது. சுவரின் பிம்பச்சலனம்கண்டு அது அங்கு ஒருநதி ஓடுவதாக பிழையாக எண்ணுகிறது. இதுவே பிரபஞ்ச மாயை. ஆலயவிஞ்ஞானமும் அதன் ஒரு பகுதியான மனோவிஞ்ஞானமும் அதன் உபகருவிகளான ஐம்புலன்களும் தவிர நமது காட்சிப் பிரபஞ்சத்தில் வேறு எதுவும் இல்லை.”