அவனை எதிர்பார்த்திருக்கும் வாஸகஸஜ்ஜிதையாக ஏங்கிக் கண்ணீர் உகுத்தாள். அவனால் கைவிடப்பட்ட விரஹோத்கண்டிகையாக விரிந்த தலைமயிரும் வீங்கிய கண்களுமாக மேடைமீது சரிந்தாள். அவனால் புறக்கணிக்கபப்ட்ட கண்டிகையாக மரணத்தை எதிர்நோக்கி நடந்தாள். அவனால் ஏமாற்றப்பட்ட விப்ரல்லப்தையாகக் கொதித்தெழுந்து சிவந்த கண்களும் சீறும் மூச்சுமாக ஓங்கி நின்றாள். யுகங்களாக அவனைக் காத்திருக்கும் ப்ரோஷிதபதிகையாக அலையடிக்கும் நீலக்கடல் விளிம்பில் மூக்குத்தி சுடர நின்றாள். பின்பு அவன் தந்த குறியிடம் தேடி அபிசாரிகையாக வந்தாள். அடர்ந்த மலர்வனத்தில் கிளைகளை விலக்கியபடி ஆவலும் தவிப்புமாக அலைந்தாள். அவனைக் கண்டு மலர்ந்தாள். அவனைப்
...more