“அஜிதர் காலத்தை ஒரு வளைகோடாக உருவகித்தார். அதை பிறகு வந்த தர்மஞானிகள் ஒரு சக்கரமாகக் கற்பிதம் செய்தார்கள். ஆகவே காலத்தை வரைசீலையாகக் கொண்ட பிற அனைத்தும் சக்கரவடிவ இயக்கம் கொண்டவையே. காலசக்கரத்தை மகாதர்மத்தின் தூலவடிவமாக வழிபடுகிறவர்கள் தங்களை சக்ராயன பௌத்தர்கள் என்கிறார்கள்.”

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)