பற்றும் செயல்வேகமும் இருக்கும் நிலையில் ரஜோ குணம் உள்ளது. அதுவே கர்மத்தின் அடிப்படை. அதில் பற்று மறைந்து, செயல் வேகம் மட்டும் மிஞ்சுகையில் சத்வ குணம் உருவாகிறது. இது ஞானத்தின் அடிப்படை. செயல் வேகமும் மறைந்து விடும்போது சூனிய நிலை உருவாகிறது. இது தமோ குணம் மிகுந்த நிலை. இதுவே முக்திக்கு அடிப்படை.