ஒவ்வொரு சொல்லுக்கும் கண்டடையும் பிரம்மகணத்தின் பரவசத்துடன் சித்தம் கூத்தாடியது. இல்லை, எதுவுமில்லை. எந்த மனிதனும் எதையும் தேடவில்லை. பதில்கள் எவருக்கும் முக்கியமில்லை. வித்தியாசமாக வாழ விரும்புகிறார்கள். வித்தியாசமாக வாழ்வதாக எண்ணிக்கொள்கிறார்கள். தனது இருப்பு பிரபஞ்சப் பெருவெள்ளத்தில் தனித்துத் தெரியவேண்டும் என்ற ஆசை அது. வெறும் அகங்காரம். மரணத்தை வெல்லும் முயற்சி. மூடர்கள் மூடர்கள்.