ஒரு தத்துவ நூலில் வரும் தத்துவ விவாதத்திற்கும் இலக்கியப் படைப்பில் வரும் தத்துவ விவாதத்திற்கும் அடிப்படைகள் வேறு வேறு. இலக்கியப் படைப்பு தத்துவ விவாதத்தை நடித்துக் காண்பிக்கிறது. அவ்வளவே. தத்துவத்தின் தனிமொழியில் அது இயங்குவதில்லை; இலக்கியத்தின் தனிமொழியிலேயே இயங்குகிறது. விஷ்ணுபுர ஞானசபை விவாதம் படிமங்களும் உருவகங்களும் நிரம்பிய புனைவு மொழியில் உள்ளது. அது தத்துவ மொழி அல்ல