மரணம் என்பது இரண்டு பிரிவு. பிறிதின் மரணம், தன் மரணம். பிறிதின் மரணம் எவருக்கும் ஒரு பொருட்டல்ல, அது மரணமேயல்ல. அது ஓர் இழப்பு. இழப்பின் தன்மையைப் பொருத்து துக்கம். ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று எதுவுமில்லை. மரணம் என்பது தன் மரணம் மட்டுமே. அது பயங்கரமானது. விவரிக்க முடியாதது. அதற்கு ஒரே அர்த்தம்தான். இல்லாமலாதல்.