“எங்கள் மகாகுருக்களின் மனங்கள் மறைவதே இல்லை. மறைவதற்கு முன் அவர்கள் தங்கள் மனங்களை இன்னோர் உடலுக்கு மாற்றி விடுகிறார்கள். இதை நாங்கள் மகாசம்வேதம் என்கிறோம். மரணம் எங்களுக்கு முடிவல்ல. ஒரு கழிவகற்றல் மட்டுமே. அதற்கு மகாவிசர்ஜம் என்று பெயர். உடல்கள் வழியாக எங்கள் குருக்கள் காலத்தைக் கடந்து செல்கிறார்கள்.”