தருக்கம் அகவெளியை அளைந்து சலித்தது. எங்கும் நிரம்பியிருப்பினும், எழுந்து வழிமறைப்பினும், தொடமுடியாத இருளென அகம். எனக்கு வேண்டுவதென்ன? எத்தனை எளிய வினா. ஆனால் எத்தனை சிரமமானது. நன்கு தெரிந்த விடை என ஒரு கணமும் ஒருபோதும் தெரிந்துகொள்ள முடியாத விடை என மறுகணமும் தோன்றிப் பிரமிக்க வைக்கும் பெரும் புதிர்.