“எதிர்ப்படும் ஒவ்வோர் உடல் வழியாகவும் ஆத்மா இன்னோர் உடலைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் உறவு வழியாகவும் ஆத்மா இன்னோர் உறவைத் தேடிச்செல்கிறது. எதிர்ப்படும் ஒவ்வோர் அழகு வழியாகவும் ஆத்மா இன்னோர் அழகைத் தேடிச்செல்கிறது— என்கிறது பிங்கல சூத்திரம்.