செய்யவேண்டியது ஒன்றுதான், எண்ணங்களை அப்படியே விட்டுவிடுவது. அவற்றைப் பின்தொடரும் பிரக்ஞையையும் விட்டுவிடுவது. முழு முற்றான சுதந்திரம் அவற்றுக்குக் கிடைக்கும்போது இயல்பான சலனம் அவற்றுக்குச் சாத்தியமாகிறது. அப்போது அவை தங்கள் முழுமையை அடைகின்றன. அந்நிலையில் அந்தத் தருணம் நிகழக்கூடும்.