எதற்காக இந்த மகாதேவாலயம்? மனித மனம் இத்தனை இருளும் மலினமும் நிறைந்து கனக்கும்போது, கல்லில் இந்தக் கனவைச் செதுக்கி வைத்திருப்பதன் ரகசியம் என்ன? தன் மனதை தன்னிடமிருந்தே ஒளித்துக் கொள்ளத்தானே? மனிதனின் கயமையின் அடையாளம்தானே இது? நான் எதற்காகவாவது முழுமையாக உடன்பட மறுக்கிறேன் என்றால் அது என்னையே ஏமாற்றிக் கொள்வதைத்தான்.”