வீரன் என்பவன் வெறுமையில் காலூன்றி நிற்பவன். வாதங்கள் தாங்கள் கட்டி எழுப்பியதை ஒருகணத்தில் சாஸ்வதமாக எண்ணிக் கொள்கின்றன. அவற்றின் நிழலில் தங்கிவிடுகின்றன. காலம் தருக்கவடிவம் கொண்டுவரும் அப்போது. உடைத்து வீசும். வெறுமை நோக்கி அனைத்தையும் இழுத்துச் சென்றபடியே இருக்கும் பிரவாகமே காலமென்பது.”