“மனோவிஞ்ஞானம் மகத்தான ஆலயவிஞ்ஞானத்தில் ஒரு துளியாகும். ஆலயவிஞ்ஞானம் கடல். துளிகளைப் பார்த்தால் கடல் இல்லை, கடலைப் பார்த்தால் துளி இல்லை. ஆலயவிஞ்ஞானம் கோடானுகோடி மனோவிஞ்ஞானங்கள் வழியாகத் தன் சலனத்தை நிகழ்த்துகிறது எனலாம். அல்லது கோடானுகோடி மனோவிஞ்ஞானங்களின் தொகுப்பே ஆலயவிஞ்ஞானம்.”