ஆகாயத்தின் இயல்பு ஒலி. ஆகாயம் பிற நான்கு பூதங்களிலும் சூட்சுமமாகக் கலந்துள்ளது. விளைவாக பல்வேறு ஒலிகள் எழுகின்றன. நீர் சொட்டும் ஒலி, அருவி ஒலி, அலையோசை, மண் சரியும் ஓசை, பூகம்ப ஒலி, தீ எரியும் ஒலி, வாயு பீரிடும் ஒலி என்று பல கோடி ஒலிகள் ஜடப்பிரபஞ்சத்தில் எழுகின்றன. ஒவ்வொரு சப்தமும் ஒரு பொருளின் குணமாக ஆகிறது. சிலவற்றின் ஒலியை நாம் கேட்கிறோம். அப்பொருளுக்கு அவ்வொலியைத் தருகிறோம். அது அப்பொருளின் பெயராயிற்று. இதுவே ஆதிமொழி.

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)