நான் அறிய வேண்டிய ஞானம் மூவகைப்படும். தத்துவம், ஹிதம், புருஷார்த்தம். எம்பெருமானே தத்துவம் என்பது யாது என்கிறார்கள் சீடர்கள். ஞானி பதிலிறுக்கிறார். சித்து அசித்து ஈஸ்வரன் என மூவகைப்பட்டது தத்துவம். உயிர்த் தொகுதியே சித்து. உடலும் இயற்கையும் அசித்து. அவற்றில் உள்ளடங்கியுள்ள எம்பெருமான் விஷ்ணுவே ஈஸ்வரன்...”