நிரந்தரமற்ற எதுவும் பொய்யே. நிரந்தரத்தைக் கண்டு நடுங்குபவன் அடையாளத்தை நாடுகிறான். காலத்தின் இடுக்கில் புகுந்துகொண்டு முடிவின்மையை நிராகரிக்கிறான். அவன் எந்தப் பொந்தில் நுழைந்தாலும் காலம் துரத்தி வரும். காதைப் பிடித்துத் தூக்கி கண்களைப் பார்த்துச் சிரிக்கும். அப்போது அவன் உடைந்துபோய் அழுகிறான். நல்ல வேளை, அதிகம் அழச் சந்தர்ப்பம் இருப்பதில்லை.”