மானுடர்களுக்கு முதுமை என்பது இருட்டு. ஒவ்வொரு விளக்காக அணைகின்றன. கடைசி விளக்கும் அணையப் போகும்போது அவன் அஞ்சுகிறான். அறியாத எதையோ இருளுக்குள் தேடி மன்றாடுகிறான். வெளிச்சம் வெளிச்சம் என்று கூவியபடி இருட்டின் ஆழத்திற்குள் விழுகிறான். பரிதாபத்திற்குரிய ஜீவன், சபிக்கப்பட்ட ஜீவன்.”