தூலமின்றி நான் உண்டா? என் எண்ணங்கள் கூட தூலத்தின் அலைகள்தானா? தூலத்தின் மீது எண்ணங்கள் எப்படி விசை கொள்கின்றன? தூலத்தை மீறிச் செல்ல ஏன் தூலம் தவிக்கிறது? போகத்திற்குப் பிறகு களைத்துப் பின்னகரும் ஆண்மிருகத்தில்தான் எவ்வளவு அமைதி. அதற்குள் ஆறாத பசி ஏதும் இல்லையா? எனக்கு மட்டும் என்ன இது? என்னை விட்டு விடு. நான் மிருகமாக இருக்கிறேன். கல்லாக மரமாக இருக்கிறேன். போதும்.

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)