காலத்தில் கட்டப்பட்டவைதாமா இவை? காலம் இவற்றால் கட்டப்பட்டதா? காலத்தில் இவை மிதக்கின்றனவா? காலத்தை இவை சுமக்கின்றனவா? காலமே அறிதலா? அறிதலின்மையே அகாலமா? அறிதலினூடாக காலமாவது அகாலமா? அறியாமையினூடாக காலம் அகாலமாகுமா? அறிந்தவை, அறிபவை, அறியப்படப்போகிறவை என்று காலம் மூன்று எனில் அறியப்படாதவையும் அறியமுடியாதவையும் எந்தக் காலம்? அறிதல் ஒடுங்க காலம் ஒடுங்குமா?

![விஷ்ணுபுரம் [Vishnupuram]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480834566l/33236596._SY475_.jpg)