“சப்த உலகங்களும் மனித உடலில் உள்ளன. காணும் ஜட உலகமே அன்னமய கோசம். காணாத புவர்லோகமே பிராணமய கோசம். ஸுவர்லோகம் அசத்தமனோமய கோசத்தாலானது. ஜனர்லோகம் சுத்தமனோமய கோசத்தின் விஸ்வரூபத் தோற்றமேயாகும். தபோலோகம் ஆனந்தமய கோசமேயாகும். பிரம்மலோகம் சின்மய கோசத்தினாலானது. உள்ளுறையும் சதானந்தமய கோசமே வைகுண்டலோகம். ஏழு பிரம்மாண்டங்களும் மனித உடலில் ஏழு நிலைகளுக்குச் சமம். ஒவ்வோர் அணுவும் மனித உடலின் அதே வடிவில்தான் உள்ளன. மனித உடல் பிரபஞ்சமேதான். அதன் ஒவ்வொரு பரமாணுவும் பிரபஞ்சமே. எனவே மனிதனே பிரபஞ்சங்களை உள்ளடக்கிய பிரபஞ்சம்.”