“முதலில் உடல் தளர்கிறது. ஆலயம் இருளடைகிறது. இடிந்து சரிகிறது. கருவறையின் உள்ளே கடைசி விளக்கு அணையும்போது தேவன் மீண்டும் மந்திரவடிவமாக ஆகிறான். பார்த்திவப் பரமாணு மீண்டும் பிராணவடிவை அடைவதே மரணம் என்பது. குண்டலினியில் குடிகொள்ளும் அப்பிராணபிந்து பிரம்மாந்திரத் துளையினூடே வெளியேறுவதே மரணம்.