“அடுத்தது கல்வி. எந்தப் பிரிவாக இருப்பினும் தத்துவக் கல்வி முதலில் தன்னம்பிக்கையையும் சுயதிருப்தியையும் தருகிறது. எல்லாவற்றிற்கும் பதில் சொல்லிவிட முடியும் என்று படுகிறது. ஆகவே, எல்லாவற்றிற்கும் பதில் இருக்கும் என்று நம்புகிறோம். தருக்கம் என்பது ஓர் அறிதல்முறை என்று எண்ணும் நிலைஅது.”