காட்டில் ஊறிய நீர் சுனையாகத் தேங்குவது போன்றது செவ்வியல் ஆக்கம். அதில் காட்டின் ஆன்மாதான் உள்ளது. காட்டின் ருசி அந்த நீரில் தெரியும். ஆனால், தடாகம் என்ற அளவில் அது முழுமையானது. செவ்வியல் ஆக்கங்கள் பிறிதொன்றின் உதவி இல்லாமலேயே நிற்கக்கூடியவை. அவற்றைப் புரிந்துகொள்வதற்கான கருவிகளையும் அவையே உருவாக்குகின்றன. அவை உருவாக்குவது ஒரு முழுமையான அர்த்தவெளியை. அந்த அர்த்த வெளி காலம் நகர நகரப் பெரிதாகியபடியே போகும். அதை வாசிப்பவர்கள் அதை கற்பனை செய்து, விவாதித்து, விளக்கி மேலும் மேலும் விரிவாக்குவார்கள். ஒரு கட்டத்தில் அது அப்பண்பாட்டால் உருவாக்கப்பட்ட பொது அர்த்தவெளியாக உருமாற்றமடையும். பல கோடி
...more