“சந்திரரே இப்போது படுகிறது. தத்துவம் பொய்யல்லவா? அது ஒரு மானுட ஒழுங்கு. அந்த ஒழுங்கிற்கு அப்பாற்பட்ட பிரபஞ்சப் பேரொழுங்கை இந்த ஒழுங்கு மூலம் அறிவது சாத்தியமா? தத்துவத்தின் சிகரநுனியில் ஒரு பாதத்தை ஊன்றமட்டுமே இடம் இருக்கிறது. மறுபாதம் வெளியில் துழாவித் தவிக்கிறது.