இன்று கேரளமாநிலத்தின் தலைநகரமாக இருக்கும் திருவனந்தபுரம் 1730களில் அன்றைய திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மாவால் தலை நகரமாக அறிவிக்கப்பட்டது. நகர்நடுவே அவர் அனந்த பத்மநாப சாமிக்கு மிகப்பெரிய ஆலயம் ஒன்றைக் கட்டினார். 20 அடி நீளத்தில் பள்ளி கொண்டிருக்கும் மிகப்பெரிய பெருமாள் சிலை கருவறையில் உள்ளது. இக்கோயிலை கட்டுவதற்காக அவர் மதுரையிலிருந்து அழைத்துக் குடியேற்றிய சிற்பிகளின் தலைமுறைகள் இன்றும் சுசீந்திரம் அருகே மயிலாடியில் வாழ்கிறார்கள். அங்கு இன்றும் சிற்பத்தொழில் சிறப்புற்றிருக்கிறது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)