இரவிக்குட்டிப்பிள்ளையின் இன்னொரு அணுக்கச் சேவகர் பட்டாணி பரீத் அவுலியா என்பவர். இவர் படுகாயம் அடைந்து மீட்கப்பட்டாலும் உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். அவருடைய சடலமும் குதிரையின் சடலமும் அருகே அடக்கம் செய்யப்பட்டன. அவர்களின் நினைவிடங்கள் இன்று தர்காவாக வழிபடப்படுகின்றன. இந்தக் கதை இரவிக்குட்டிப்பிள்ளைப் போர் என்னும் தெற்குப்பாட்டாக பாடப்படுகிறது.

![தெய்வங்கள், பேய்கள், தேவர்கள் [Deivangal, Peigal, Devargal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1708793797l/209109407._SY475_.jpg)