ஆசிரியர்..
அமரர் கல்கி..
கதை நடைபெறும் வரலாற்று பகுதிகள்..
காஞ்சி, மாமல்லபுரம், வாதாபி, மண்டப்பட்டு கிராமம் மற்றும் அஜந்தா குகைகள்..
கதாபாத்திரங்கள்..
நரசிம்மவர்ம பல்லவர், மகேந்திரவர்ம் ப்ல்லவர், பரஞ்சோதி, ஆயனர், சிவகாமி, புலிகேசி, நாகநந்தி அடிகள், சத்ருக்னன், குண்டோதரன், கண்ணபிரான், கமலி, மானவர்மன் ..
வகைப்பாடு..
வரலாற்று புதினம்..
கதை..
மிக நெடியதும், சுமார் 1000 பக்கங்களுக்கு மேல் உள்ளதுமான இந்நாவலின் கதை இதுதான் " மகேந்திரவ்ர்ம பல்லவன் காஞ்சியை சிறப்புடன் ஆண்டுவருகிறான். பல்லவம் யுத்தமில்லாத அமைதி பூமியாய், கலைகள் நாட்டியங்கள் சிறந்து விளங்குகிறது..மகேந்திரவர்மனின் மகனும் "மாமல்லன்" என்று அழைக்கப்படும் நரசிம்மவர்ம பல்லவனும், ஆயனச்சிறிபியின் மகளும் ஆடற்கலையில் சிறந்தவளுமான சிவகாமியும் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். ஆயனச்சிற்பி மாமல்லபுரத்தின் குடவரைக்கோயில்கள்
அமைக்கும் பணியில் தம்மை ஈடுபடுத்திக்கொள்கிறார்..
இந்த சமயத்தில் காஞ்சிக்கு,காஞ்சியில் இருக்கும் புத்த பிட்சு போர்வையில் உள்ள வாதாபி ஒற்றன் நாகநந்தி அடிகள் மூலம் யுத்த அபாயம் வ்ருகிறது. காஞ்சியை முற்றுகையிடுகிறான் புலிகேசி. ஆனால் அமைதிவிரும்பியான மகேந்திரர் போரை விரும்பாமல் சா���ுக்கிய மன்னன் புலிகேசியுடன் நட்பு பாராட்டி, அவனை தனது விருந்தினராக அழைத்து காஞ்சி மாநகரை சுற்றிகாட்டி, சிவகாமியின் நடனத்தையும் காணும்படி செய்கிறார். சிநேகிதன் போல் பழகிய புலிகேசி காஞ்சியை விட்டு வெளியேறியவுடன் தன் படைகளுடன் பல்லவ நாட்டின் சுற்றுப்புற கிராமங்களை தக்கி அழித்து, ஆயனச்சிற்பியை படுகாயப்படுத்திவிட்டு, சிவகாமியை வாதாபிக்கு சிறைப்பிடித்து செல்கிறான். இந்த போரில் மகேந்திரவர்மர் உயிர்துறக்க நேரிடுகிறது. நரசிம்மவர்ம பல்லவன் சிவகாமியின் மீதுள்ள காதலால், ஒற்றர்கள் மூலமும், ஒரு முறை தானே மாறுவேடத்தில் வாதாபி சென்று சிவகாமியை திரும்ப வருமாறு அழைக்கிறான். ஆனால் சிவகாமியோ ஒரு சபதம் செய்கிறாள் "என்று நரசிம்மபல்லவர் ஒரு பெரும் படையுடன் வாதாபி வந்து, புலிகேசியை கொன்று, வாதாபியை எரித்து, தம்மை அழைத்து செல்லும்போதுதான் வருவேன்" என்று சபத்மிடுகிறாள். சபதத்தை நரசிம்மவர்மன் எவ்வாறு நிறைவேற்றினான்? சிவகாமியின் காதல் கைகூடியதா? என்பதே இந்த சரித்திர புதினத்தின் சுவைமிகு கதை..
என் கருத்து..
சபாஷ் கல்கி..சிவகாமி என்ற கற்பனை பாத்திரம் மூலம், பல்லவர் ஆட்சி, மாமல்லபுரம் குடவரைகோவிலகள், வாதாபி போர், புள்ளலூர் கிராம போர், நரசிம்ம வர்மனின் காதல், அஜ்ந்தா குகை ஓவியங்கள், புலிகேசி காலத்தில் அவரது சபைக்கு வந்த சீன அறிஞர், பல்லவர் ஆட்சிக்கலத்தில் இருந்த சமய முறைகள், திருநாவுக்கரசரின் ஆன்மீக பணிகள் ..என அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஒருசேர, சுவைபட தந்தமைக்காக...
சபாஷ் கல்கி...அரண்மனை, சிற்பக்கூடம், ஆலோசனை மண்டபம், போர்முனைகள், ஆகிய கதையின் அனைத்து நிகழ்வுகளிலும் புத்தகம் படிக்கும் நேயர்கள் தாமும் ஒரு மூலையில் அமர்ந்து நிகழ்வுகளை பார்க்கிறோமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியமைக்கு...
சபாஷ் கல்கி...புத்த்கத்தை முடிக்கும் போது, ஆகா..இந்த பல்லவதேசத்தை பிரியபோகிறோமே, என்ற துயரத்தை நேயர் மத்தியில் ஏற்படுத்தியமைக்காக..
படிக்க..பாதுக்காக்க..பின் மீண்டும் படிக்க...அலுக்காத காவியம்..