Sandilyan or Chandilyan (Tamil: சாண்டில்யன்) is the Pen name of Bhashyam Iyengar, a noted Tamil writer of Historical fiction. He is known for his historical romance and adventure novels, often set in the times of the Chola and Pandya empires.
சாண்டில்யன் (1910-1987) பிரபலமான தமிழ் எழுத்தாளர். இவர் வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட புதினங்கள் எழுதிய எழுத்தாளர்களுள் ஒருவர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாக வெளிவந்துள்ளன.
பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் தமிழ்நாட்டில் உள்ள திருக்கோவிலூரில் நவம்பர் 10, 1910ம் ஆண்டு பிறந்தார். இவரது பெற்றோர்- ராமனுஜம் அய்யங்கார் மற்றும் பூங்கோவில்வல்லி. சென்னையில் உள்ள பச்சையப்பா மற்றும் நேஷனல் மாடல் பள்ளிகளில் பயின்றார். திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரியில் பட்டம்பெற்றார். கல்லூரியில் இருந்தபோது சி. ராஜகோபாலாச்சாரியின் தாக்கத்தால் இந்திய சுதந்திர போரட்டத்தில் இணைந்து இந்திய தேசிய காங்கிரசில் உறுப்பினரானார். 1929இல் ரங்கநாயகியை மணந்தார்.
கல்லூரி படிப்பை முடித்தபின் 1930களில் சென்னை தி.நகரில் குடியேறினார்.அருகாமையில் வசித்த பிரபல எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரு. வி. க நடத்திய வார இதழ் நவசக்தியில் பணியாற்றிய வி. சுவாமிநாதனும் அவருக்கு நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் அளித்த ஊக்கத்தால் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தார். அவர் எழுதிய முதல் சிறுகதை சாந்தசீலன் ஆகும். அவரது சிறுகதைகளின் சிறப்பைக் கண்ட கல்கி, கண்ணம்மாவின் காதலி, அதிர்ஷ்டம் என்ற இரு சிறுகதைகளை ஆனந்த விகடனில் வெளியிட்டார். இந்த வெற்றி அவரை திருக்கண்ணபுரம் சீனிவாசாரியார் என்ற தமிழ்ப் பண்டிதரிடம் முறையாக தமிழ்மொழியைப் பயிலத் தூண்டியது. சுதேசமித்திரன் வார இதழில் சிறுகதைகள் எழுதினார். 1935-45வரை சுதேசமித்திரனில் நிருபராகப் பணியாற்றினார். ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்சில் உதவி ஆசிரியராக பணிபுரிந்தார்.
ஹிந்துஸ்தான் டைம்சில் வேலை பார்த்த பின்பு சுதேசமித்திரனில் மீண்டும் பணியில் சேர்ந்தார். முழுநீள புதினங்கள் எழுதத் தொடங்கினார். பலாத்காரம் என்னும் அரசியல் புதினத்தை எழுதி தானே வெளியிட்டார். அமுதசுரபி போன்ற பிற பத்திரிக்கைகளிலும் கதைகள் எழுதினார். பாலைவனத்துப் புஷ்பம், சாந்நதீபம் இரண்டும் அவரது முதல் வரலாற்றுப் புதினங்கள். பின்பு குமுதம் வார இதழில் இவரது கதைகள் தொடர்களாக வர ஆரம்பித்தன. இதனால் குமுதத்தின் விற்பனை கூடியது. குமுதத்தில் தனது கதைகளுக்காக மாத வருமானம் வாங்கிய மிகச்சிலருள் இவரும் ஒருவர். குமுதத்தை விட்டு வெளியே வந்தபின் சொந்தமாக கமலம் என்ற வார இதழ் ஆரம்பித்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. அவரது புதினங்களை வானதி பதிப்பகம் புத்தகங்களாக வெளியிட்டது. அவை விற்பனையில் சிகரத்தை எட்டின. முதல் வெளியீடு வந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அவரது புதினங்கள் இன்னமும் அச்சில் உள்ளன. கமில் சுவெலபில், சாண்டில்யனை மிகப் பிரபலமான தமிழ் எழுத்தாளர்களில் நான்காவதாக குறிப்பிடுகிறார். சாண்டில்யன் செப்டம்பர் 11, 1987ல் மரணமடைந்தார்.
I am fond of this author’s brilliance in adding his imagination to the actual historical world. I started this book with the intention to enjoy that experience. I was amazed at his ability to create a story of his own with all the historical facts. Negatives I felt are the repeated jargons of repeated narratives for the same character and the unwanted stresses over religious thoughts.
சாண்டில்யன் அவர்களுக்கே உரிய தனித்திறமை... 70களில் இவருக்கு பெரும் வாசக பட்டாளம் இருந்ததில் ஆச்சரியமில்லை!!! காரணம் இவர் கதாநாயகர்களின் காதல் காம விளையாட்டுகள்தாம்..
I admire the choice of words of the author. As I started navigating to chapters I noticed the suspense that triggered my curiosity and I couldn’t wait to complete the part 1 ASAP. To my surprise I’ve finished reading in 2 days. I felt repeated words and sentences could be neglected to enhance the reading flow. Finally the titles of each and every chapter were 100% aptly ended with the same at the end of all the chapters after the wonderful narration. I believe that only a few could have this type of writing style.
As usual, சாண்டில்யன் Sir at best!! However this story also reminds me about கருணாகர பல்லவன் & கடல் புறா where he gets trained by a pirate அகூதா, although the theme is similar here there's added thriller that unlike அகூதா being friend here D' Castro is not in friendly terms with இதய சந்திரன்
This entire review has been hidden because of spoilers.
It is a High fantasy fiction on maharstara politcs during 17th century india. Well written and very informative. A fun to read looking forward to part 2
நம்ம தலைமுறை அறியாத சரித்திர நாயகன்.குறிப்பாக தமிழ் மக்கள் அறியாத தலை சிறந்த வீரன்.சாண்டில்யன் , கனோஜியின் சரித்திரத்தை படித்த பிறகு .கனோஜி பற்றி தமிழில் எழுத வேண்டும் என்ற ஆவல் பெரிதாய் இருந்தது.அவருடைய 10 வருட முயற்சியில் உருவானது தான் இந்த ஜல தீபம்.
நான் மும்பையில் 3-4 வருடம் இருந்தது எனக்கு படிக்கும் போது மேலும் சுவாரசியத்தை தந்தது.நமக்கு(தமிழர்களுக்கு) ஏற்றார் போல் இருக்க வேண்டும் என்பத்ற்காகவோ என்னவோ இந்த கதையின் நாயகனை [இதயசந்திரன் - கற்பனை கதாபாத்திரம்] தமிழனாக வைத்திருந்தார்.இந்த கதையின் மிக முக்கியமான கதாபாத்திரங்கள் [ கனோஜி தவிர] யாவும் கற்பனையே.ஆனால் சரித்திர நிகழ்வுகளுடன் அழகாக சேர்த்திருப்பார்.
நான் சுற்றிய பல சுற்றுலா தளங்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.முக்கியமாக , ஜச்ஞீரா [Janjira fort ],இதன் சிறப்பு கடல்கரையிலிருந்து சற்று உள்ளிருக்கும்.கரையிலிருந்து பார்த்தால் இதன் நுழைவுவாயிலை காண முடியாது.
[படிக்கும் போது , ரத்னகிரிக்கு செல்லும் வாய்பை நான் ஒரு முறை தவறுவிட்டது தான் எனக்கு வருத்தம் தருகிறது]
தானே,கல்யான் .. மும்பை சுற்றியுள்ள இடங்கள் [நம்ப தாம்பரம் மாதிரி].நான் அடிக்கடி அந்த இடங்களுக்கு செல்வதுண்டு. அந்த இடங்கள் இந்த கதையில் வரும்போது ஒரு பெருமிதம் வந்துதான் போகிறது.
நான் படித்த சரித்திர கதைகளில் யாராவது ஒரு துறவி இருப்பார் , முக்கிய கதாபாத்திரமாக.இங்கும் அப்படி பிரும்மேந்திர சுவாமிகள் இருக்கிறார்.
3 நாயகிகள் , வர்ணனைக்கு பஞ்சமில்லை.சாண்டில்யன் பாணி தனி பாணி தான் [கிட்டதட்ட வைரமுத்து மாதிரி - இது என்னுடைய கருத்து தவறாக இருப்பின் மன்னிக்கவும்] .மூவரும் நாயகனுடன் காதலில் மயங்குவது கொஞ்சம் அதிகமோ என்று தோனியது.
படிக்கும் போது , சுவாரசியமாக வரலாற்று நிகழ்வுகள் நம் கண்முன்னே கண்டிப்பாக வந்து போகும்.
Sandilyanis one of the best tamil literature writer, i laughed way too much with the sarcastic dialogues. His writing is tempting at every corner, can't wait to read ஜல தீபம் Jala Deepam (Jala Deepam, #2)
மகாராஷ்டிரர்களை பற்றியது. இதயசந்திரன் தஞ்சையிலிருந்து ஒருவனைத் தேடி மகாராஷ்டிரம் செல்லும் வழியில் பிரும்மேந்திர சுவாமியை சந்திக்கிறான். அந்த சுவாமியினால், கனோஜி ஆங்கரே இதயசந்திரனை தன்னுடன் அழைத்து செல்கிறான். கனோஜி ஆங்கரே தன் மாலுமி காஸ்ட்ரோவிடம் இதயசந்திரனையும் மாலுமியாக்க சொல்ல, இருவரும் ஜல தீபம் என்னும் கப்பலில் பயணிக்கிறார்கள்.
A historical events happened in Maharashtra after Sivaji's era. A lot of true historical events and people were bound within the story line. The period where British were about to dominate the land also happening. Pretty interesting read to know a story around such events and places to know, which appear completely different today, around Bombay and Pune.
Well paced epic cant wait to read the next part. Felt the romantic scenes were stretched a bit too much at the end which slowed the pace of the book a but. But nevertheless a very good good intriguing enough to keep you guessing.
ஒரு மனிதனைத் தேடி வருபவனை இரண்டு பெண்களிடம் சிக்கவிட்டு இருவரிடமும் காதல் கொள்ளச் செய்திருக்கிறார். இதற்குள் அவன் பயணத்தை பலபடி திருப்ப நமக்கு சுவாரஸ்யத்தை தரவென்று சில கதாபாத்திரங்களும் இருக்கின்றன. இதயசந்திரன் மாலுமி பயிற்சியில் துட���ப்பைத் தொட்டிருக்கிறான். மற்றவை அடுத்த பாகத்தில்