நான் கண்டு வியந்த புரட்சியாளன்
20 ஆம் நூற்றாண்டு கண்ட மிகச்சிறந்த போராளிகளில் மிகவும் முக்கியமானவர் எர்னஸ்டோ என்னும் சே குவேரா. இவரை நினைத்தால் கர்வமாக உள்ளது.இனம்,மொழி,நாடு கடந்து உலகத்திலுள்ள அடிமைத்தளத்திலுள்ள மக்களுக்காக நைந்து போன நுரையீரலுடன் (ஆஸ்துமா நோய்)போராடிய மாவீரன் சே.எல்லா தலைவர்களுமே சொந்த மக்களுக்காக சொந்த மண்ணிற்காக போராடியவர்கள் ஆனால் சே மட்டுமே அதில் விதிவிலக்கு. இதற்கு உதாரணமாக ஒரு செய்தியாளர் சே வை நோக்கி நீங்கள் அர்ஜெண்டினாவில் பிறந்தீர்கள்...பின்பு கியூபா விடுதலைக்குப் போராடீனீர்கள்....இப்போது பொவிலியாவில் போராடிக் கொண்டு இருக்கீர்கள்....எது உங்கள் தாய்நாடு????அதற்கு சே வின் பதில் அடிமைப்பட்டு இருக்கும் அனைத்து தேசமும் என் தாய்நாடே என பதிலளித்தார். சே என்பது நண்பர் அல்லது தோழர் என்ற பொருள் கொண்ட அர்ஜெண்டினா சொல்லாகும். மக்கள் இவரை சே என்று அன்புடன் அழைத்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிடல் காஸ்ட்ரோவுடன் சேர்ந்த புரட்சிகளை செய்தார். லத்தீன் அமெரிக்க புரட்சி (கியூபா )தான் எர்னஸ்டோ என்னும் சாமானியனை சே குவேராவாக மாற்றியது. கியூபாவின் வளர்ச்சியில் இரண்டு பெரிய சக்திகள் உள்ளன ஒன்று பிடல் காஸ்ட்ரோ மற்றொன்று சேகுவேரா. காஸ்ட்ரோவுக்கு கியூபா தன் சொந்த நாடு போராடும் பண்பு இயல்பானது. ஆனால் சே'வுக்கு அப்படி அல்ல. தனக்கு முற்றிலும் தொடர்பற்ற மற்றொரு தேசத்தின் விடுதலைக்காக தன் உயிரையும் பணயம் வைத்து ஆயுதம் ஏந்தினார் . இதனால்தான் சே ஒரு மாமனிதராக அடையாளம் காணப்படுகிறார்.
சே விற்கு தான் அணியும் ஆடை பற்றியும் சவரம் செய்வது பற்றியும் சிறிதளவும் கவலை இல்லை இதனாலேயே இவரின் புறத்தோற்றம் பலருக்கும் பிடிக்காமல் போனது. ஆனால் அகத் தோற்றமோ கம்பீரமானது.
தனது மரணத்தைப்பற்றி கூறும் போதெல்லாம் சாவை கண்டு ஒருபோதும் பயப்பட போவதில்லை என்றும், ""நான் சாகடிக்க படலாம் ஆனால் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டேன் ""என்று கூறுவார்.
மார்க்சியவாதி ,மருத்துவர், இலக்கியவாதி ,புரட்சியாளர், யுந்த வல்லுனர் என பன்முகத் தன்மைகளை கொண்ட சேவின் பூதவுடல் அழிக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அவரது கொள்கைகளால் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டே இருப்பார்.
சேகுவேரா என்பது ஒரு பெயர் அல்ல அது ஒரு வரலாற்று சரித்திரம்.