என்னுடைய தமிழ் வாசிப்பானது நான் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றபோது, முதல் இரண்டு ஆண்டுகளில் படித்த தமிழ்ப் பாடபுத்தகங்களோடு முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு முதுகலை மற்றும் முனைவர் பட்டம் என தமிழ் வாசிப்பு முற்றுமாக குறைந்து ஆங்கிலத்தில் மட்டுமே புத்தகங்கள் படிப்பது வழக்கமாகிவிட்டது. எனவே, சொற்றொடர் பிழைகளை சலித்துக்கொள்ளவும். வருங்காலங்களில் திருத்திக்கொள்வேன். புத்தக வாசிப்பு இனிதெனினும், தமிழில் வாசிப்பு குறைந்து விட்டதே என சிறிய வருத்தம் எப்போதும் உண்டு. நீண்ட நாட்களாக தமிழ் புத்தகங்கள் படிக்கவேண்டுமென்று எண்ணிக்கொண்டிருந்த வேலையில் என் தந்தை இந்த புத்தகத்தை நேற்று என்னிடம் கொடுத்தார். ஒரே நாளில் படித்து முடித்து விட்டேன்.
பெண் ஏன் அடிமையானாள் புத்தகம் வெளியிடப்பட்டு ஏறத்தாழ என்பது ஆண்டுகள் ஆனபோதும், இன்றைய பெண்ணியம் பேசுபவர்கள் அனைவரும் முன்வைக்கக்கூடிய முக்கிய தலைப்புகளை 1940 காலங்களிலே பேசி இருக்கிறார் பகுத்தறிவு பகலவன் பெரியார். கற்பு, மறுமணம், காதல், சொத்துரிமை என இவ்வாறாக இந்த புத்தகத்தில் பெரியார் 'பெண் விடுதலை' என்ற தலைப்பின் கீழ் மொத்தமாக பத்து அத்தியாயங்களை எழுதி இருக்கிறார். பெரியாரின் பெண்ணியம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடலுருவ வேறுபாடுகள் பல்வேறு வகையில் இருந்தாலும், ஒரு பாலினத்தவர் மற்றொரு பாலினத்தவருக்கு எந்த ஒரு வகையிலும் சிரிதானோர் இல்லை எனவும், ஆண்கள் எவ்வித வாய்ப்பையும் சுதந்திரத்தையும் தாம் உரிமையாக கருதுகிறார்களோ, அவ்வனைத்து வாய்ப்புகளும் சுதந்திரமும் பெண்களுக்கும் உரிமையாக பொருந்தும் என்பதே ஆகும். இவ்வாறாக, பெண் அடிமைத்தனத்தை ஊக்குவிக்கும் விதமாக ஆண்கள் பற்பல ��ோட்பாடுகளை அவர் சொந்த சுயநல சவுகரியத்திற்காக உருவாக்கி வைத்துள்ளதாகவும் பெரியார் இந்த பத்து கட்டுரைகளில் விவரித்துரைக்கிறார்.
மேற்கண்ட தலைப்புகளில் சில, இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட மத அடிப்படைவாதிகளுக்கும், பழமைவாத விரும்பிகளுக்கும் விவாதப்பொருளாக இருக்க, பெரியார் இத்தலைப்புகளை தேர்வுசெய்து எளியோருக்கும் புரியும்வண்ணம் எழுதியிருப்பது அவர் பாலின சமநிலை மற்றும் மகளிர் சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு பெறச் செய்தல் ஆகிய சமூகநீதி கொள்கைகளின் மேல் கொண்டிருந்த பற்றைக்காட்டிலும், ஒரு மனிதன் பிற மனிதன் மேல் செலுத்திகின்ற ஆதிக்கத்தின் மீது கொண்ட வெறுப்பையே பெரிதாக உணர்த்துகிறது. அவ்விதத்தில், ஆதிக்கம்தான் பெரியாரின் all time எதிரி. ஏனெனில், அவர் ஒவ்வொவொரு கட்டுரையின் இறுதியிலும் பெண்களுக்கு கூறுவதாவது முற்போக்கு பேசும் ஆண்மகனார் எவரும் பெண் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக தான் உள்ளார்களே தவிர அவர்களால் ஒரு சிறிதும் பயனில்லை எனவும், பெண்கள் தங்கள் தேவைகளையும், அதிகாரத்தையும், உரிமைகளையும் பெற்றுக்கொடுக்கின்ற இயக்க அரசியலையும், போராட்டங்களையும் தாங்களாகவே முன்னெடுப்பதே சிறந்தது என் வாதிடுகிறார்.
அம்பேத்கர் ஒரு கட்டுரையில் ஒரு மனிதனுக்கு உண்மையான முழு சுதந்திரம் எது என்பதை விளக்க, "One who is not a slave of usage, customs, and traditions, or of the teachings because they are brought down from the ancestors; one whose flame of reason is not extinguished--I call him a free man. He who has not surrendered himself, who does not act on the teachings of others blindly; who does not keep faith on anything unless it has been examined critically in the light of the cause and effect theory; who is always prepared to protect his rights; who is not afraid of public criticism; who has enough intellect and self-respect so as not to become a doll in the hands of others--I call such a man a free man. He who does not lead his life under the direction of others, who carves out his own aim of life according to his own reason, and decides himself as to how and in what way the life should be led--I call him a free man. In short, a man who is the master of his own life, him alone I consider a free man." என எழுதி இருப்பார். கருத்து ரீதியில் அம்பேத்கர் மற்றும் பெரியாருக்கு எள்ளளவும் வித்தியாசம் இல்லை என்பது நாம் அறிந்தவையே. அவ்வாறாக, திருக்குறளில் உள்ள பெண் சார்ந்த விடயங்களுக்கு தனது மாற்றுக்கருத்தை முன்வைக்கின்றபொழுது பெரியார் கூறுவதும் அஃதே. எதையும் ஒரு மாமனிதர் சொன்னார் எனவும், அது எக்காலத்திற்கும் ஏற்றது என சொல்லக்கூடிய கருத்துக்களையும், புனிதம் என்று போற்றப்படுகின்ற அனைத்தையும் பகுத்து ஆராய்ந்து இக்காலசூழலுக்கு அவை ஏற்றவையா என்று சற்று சிந்தித்து செயல்படுவதும் தான் சமூக மாற்றத்திற்கான கருவியென பெரியார் கூறுகிறார். தவிர, பெண்களுக்கு உண்மை சுதந்திரம் யாதெனில் அது அவர்களின் தேவை மற்றும் விருப்பங்களை தாமாகவே நிர்ணயித்து வாழுகின்ற வாழ்வையே உண்மையான சுதந்திர வாழ்க்கையென கூறுகிறார்.
சமகால தலைவர்கள் பெரும்பாலானோர் பாலின சமநிலை மற்றும் சமூக சீர்திருத்தனை வெற்றுக்கூச்சலாக எண்ணி இவை எல்லாம் சீர்திருத்தங்கள் மூலம் செய்துவிட முடியாது, பிரச்சாரம் மூலம் தான் சரி செய்ய முடியும் மற்றும் ஸ்வராஜ்யம் வந்துவிட்டால் பிறகு சட்டம் இயற்றி கொள்ளலாம் என்றும் மக்களை ஏமாற்றி காலம் தள்ளி கொண்டுவந்தநிலையில், பெரியார் மிகவும் எளிமையாக பெண்களை காப்பாற்ற ஆண்களால் தான் இயலும் என்ற பிம்பத்தை நீக்கி, அதிகாரம் பெற பெண்களை சிறை கொண்டுள்ள ஆண்களால் வகுக்கப்பட்ட கோட்பாடுகளான கற்பு,பெண்மை, ஆண்மை, கலாச்சாரம், பாரம்பரியம், சாஸ்திரம் முதலியன நீங்க பெண்மணிகள் தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்று வலியுறுத்திகிறார். குழந்தை திருமண தடுப்புச்சட்டத்தை ஆங்கிலேயர் கொண்டுவந்த பொழுது, தங்கள் மக்களின் நம்பிக்கை முறைகளில் தலையிட வேண்டாமென அச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தேசியவாதி ஆண்களை சுட்டிக்காட்டி எழுதியிருப்பது சட்டம் இயற்றுதலில் பெண்களின் பங்கு இக்காலத்தில் எம்மாதிரியான முக்கியத்துவம் வாய்ந்தது என தெளிவுறச்செய்கிறது.
பெரியார் ஒவ்வொறு தலைப்பினை அணுகும் முறையினில் நான் கண்டு வியந்தது என்னவெனில், அவர் அத்தலைப்பின் உட்பட்ட விடயங்களுக்கு பிரமாண்டமான அறிவியல் ஆய்வையோ, மானுடவியல் சார்ந்த ஆய்வறிக்கையோ அல்லது உளவியல் வாதங்களையோ சாராமல், எளிமையாக 'எது நியாயம்?' என்ற ஒற்றை கோட்பாட்டில் கீழ் அணுகும் முறையே. உதாரணமாக கற்பு (Chasitity, Virginity) போன்ற சொல்லாடல்கள் ஏன் பெண்களுக்கு மட்டும் உள்ளது? விபச்சாரம் என்ற சொல் ஏன் பெண்களுக்கு மாத்திரம் சொல்ல பயன்பட்டது? விபச்சாரம் செய்ததாக பெண்களை இழி பேசி, பழித்து துன்பப்படுத்தியிருக்கார்களே தவிர, அப்பெண்களை நாடிய ஆண்களை விபச்சாரன் என்று அழைத்தும், அவனை பழித்து பேசியும், குற்றம் சொல்லியும் ஏன் எவரும் முன்வரவில்லை என பெரியாரின் பல கேள்விகள் மனிதர்கள் தர்க்கம் மற்றும் நியாயம் சார்ந்து வாழ சிந்திக்கத்தூட்டுபவையாக உள்ளன. பொது ஒழுக்கம் (Public Morality) என்பது காலத்திற்கு ஏற்றார் போல் மாறக்கூடிய தன்மை உடையது. அது வாழிவியலுக்கு தேவை என்றபொழுதிலும் அம்மாதிரியான பொது ஒழுக்கம் தனி மனித சுதந்திரத்துக்கு பாதகமாக இல்லாமலும், ஏற்ற தாழ்வு பேத தத்துவம் இல்லாமலும் இருக்கவேண்டும். அவ்வாறாக, விதவைகள் மறு திருமணம் என்பது அரை நூற்றாண்டிற்கு முன்பு பொது ஒழுக்கத்திற்கு எதிராக இருந்ததையும், அதற்கான தகவல்களை பெரியார் 'விதவைகள் நிலைமை' என்ற தலைப்பின்கீழ் மேற்கோள்காட்டியவற்றை படிக்கையில், இந்திய துணைக்கண்டத்தில் அக்காலத்தில் பெண் குழந்தைகளின் வாழக்கை நிலை துயரமன்றி வேறெதுவும் இல்லை என புலப்படுகின்றது.
இப்புத்தகத்திலுருந்து நான் கற்றுகொண்டவை பெரியது. அஃதாவது, பெண் விடுதலை என்னவென எவரேனும் கேட்டால் பெரியாரின் இரண்டு வரி பெண்ணியத்திற்கான பொருளை எளிமையாக கூறிவிடுவேன். அது, ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையமைப்பின் தன்மையிலே வேற்றுமை உண்டெனினும், ஒரு பாலினத்தவர் மற்றொரு பாலினத்தவருக்கு எந்த ஒரு வகையிலும் சிரிதானோர் இல்லை எனவும், ஆண்கள் எவ்வித வாய்ப்பையும் சுதந்திரத்தையும் தாம் உரிமையாக கருதுகிறார்களோ, அவ்வனைத்து வாய்ப்புகளும் சுதந்திரமும் பெண்களுக்கும் உரிமையாக பொருந்தும் என்பதே ஆகும். சமத்துவ உணர்ச்சி கொண்ட அனைவரும் 96 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவேண்டும்.