ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம். அது விளையாட்டும்கூட. புய வலு, தொழில் நுட்பம், சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும். தான் போராடுவது மனித னுடன் அல்ல, ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்கவேண்டும் மாடு அணைபவன். அந்த இடத்தில் மரணம் தான் மனிதனுக்குக் காத்துக் கொண்டிருக்கும். காளைக்குத் தன்னோடு மனுஷன் விளை யாடுகிறான் என்று தெரியாது. அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை. அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜெல்லிக் கட்டு பற்றிய வர்ணனை தத்ரூப மாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. நுட்பமாகவும்கூட. ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப்பட்டது. படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை.
சி.சு. செல்லப்பா (C.S. Chellappa) ஒரு எழுத்தாளர் மற்றும் இலக்கிய விமர்சகர். "எழுத்து" என்ற பத்திரிக்கையினை தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர் செல்லப்பா.
பல நல்ல எழுத்தாளர்களையும் விமர்சகர்களையும் தன் எழுத்து பத்திரிக்கையின் மூலம் ஊக்குவித்தவர் செல்லப்பா. சிறந்த விமர்சகர்களாகவும், எழுத்தாளர்களாகவும் கருதப்படும் வெங்கட் சாமிநாதன், பிரமீள், ந.முத்துசாமி மற்றும் பல எழுத்தாளர்கள் சி.சு.செல்லப்பாவினால் ஊக்குவிக்கப்பட்டவர்கள். தமிழின் சிறந்த நாவல்களாக கருதப்படும் வாடிவாசல், "சுதந்திர தாகம்" போன்றவற்றை எழுதியவர் செல்லப்பா. காந்தியக் கொள்கைகளில் மிகுந்த பற்றும் ஈடுபாடும் கொண்டவர்.
Cinnamanur Subramaniam Chellappa (Tamil: சி.சு. செல்லப்பா) was a Tamil writer, journalist and Indian independence movement activist.He belonged to the "Manikodi" literary movement along with Pudhumaipithan, Ku Pa Ra, Va. Ramasamy, N. Pichamurthy and A. N. Sivaraman. He also founded Ezhuthu, a literary magazine. His novel Suthanthira Thagam won the Sahitya Akademi Award for 2001
The best ever portrayal in Tamil. This book left me wondering why C.S.Chellappa is not a celebrated author here!! I would strongly recommend every Tamil readers here to read it at least once.
ஜல்லிக்கட்டு சார்ந்து தமிழில் எழுதப்பட்ட நாவல்களில் முதன்மையானது வாடிவாசல்.
திரைக்கதை எழுதுவதில் 3 acts structure எனும் உத்தி முக்கியமானது. இந்த நாவலை வாசிக்கும் பொழுது ஒரு திரைக்கதையை வாசிப்பது போலவே இருந்தது. எனவே இந்த நாவலையும் அந்தத் திரைக்கதை உத்தியின் பாணியிலேயே அணுகினால் என்ன என்று தோன்றியது. வாடிவாசல் நாவல் எவ்வாறு இந்தத் திரைக்கதை வடிவத்துடன் பொருந்திப் போகிறது என்ற ஒர் அலசல் தான் இந்தப் பதிவு:
ನಮ್ಮ ದೇಶದಲ್ಲಿ ಕ್ರೀಡೆಗಳಿಗೆ ಮಹತ್ತರವಾದ ಪ್ರಾಮುಖ್ಯತೆ ಇದೆ. ಇಲ್ಲಿ ಕ್ರೀಡೆಗಳು,ಕ್ರೀಡೆಯಾಗೆ ಉಳಿಯದೆ ನಮ್ಮ ಸಂಸ್ಕೃತಿಯಲ್ಲಿ ಬೆರೆತು ಅವು ಅಘೋಷಿತ ಧರ್ಮವಾಗಿವೆ. ಉದಾಹರಣೆಗೆ ನಮ್ಮದೇ ರಾಜ್ಯದ ಕಂಬಳವೂ ಒಂದು.
ಇಂತಹದೆ ತಮಿಳು ನಾಡಿನ ದೇಶಿ ಆಟವಾದ ಜಲ್ಲಿಕಟ್ಟುವಿನ ಕಥೆ ವಾಡಿವಾಸಲ್. ಇದರ ಮೂಲ ತಮಿಳು. ಮೂಲ ಕರ್ತೃ ಚಿ. ಸು. ಚೆಲ್ಲಪ್ಪ, ತಮಿಳಿನ ಪ್ರಮುಖ ಬರಹಗಾರರಲ್ಲಿ ಒಬ್ಬರೆಂದು ಓದಿದ್ದೇನೆ. ಈ ಕಾದಂಬರಿ ಅಲ್ಲಿನ ಪ್ರಮುಖ ಗದ್ಯಗಳಲ್ಲಿ ಒಂದು.
ಈ ಕಾದಂಬರಿ ಕಿರಿದ್ದಾಗಿದ್ದರೂ ಹಲವಾರು ಪದರಗಳಿಂದ ಕೂಡಿದೆ. ಮನುಜ-ಮೃಗದ ಸಂಬಂಧ, ತಂದೆ ಮಗನ ಸಂಬಂಧ, ಗೆಳೆಯರ ಸಂಬಂಧ ಇವೆಲ್ಲವನ್ನೂ ಲೇಖಕರು ತೀಕ್ಷವಾಗಿ ಹೆಣೆದಿದ್ದಾರೆ. ಇವೆಲ್ಲಕ್ಕಿಂತ ಹೆಚ್ಚಾಗಿ ನನಗೆ ಕಾಡುವುದು ಇಲ್ಲಿನ ಮೇಲು ಕೀಳಿನ ಭಾವ, ಜಮೀನ್ದಾರ ಮತ್ತು ಪಚ್ಚಿಯ ನಡುವೆ ಕಾಣುವ ಈ ಭಾವ ಸೂಕ್ಷ್ಮವಾಗಿ ಲೇಖಕರು ಸೆರೆ ಹಿಡಿದಿದ್ದಾರೆ.
ಈ ಕಥೆಯ ಜೊತೆಗೆ ಜಲ್ಲಿಕಟ್ಟು ಆಟವು ಹೇಗೆ ಆ ಪ್ರಾಂತ್ಯದ ಜೀವನಾಡಿಯಾಗಿದೆ ಎಂಬುದನ್ನು ಸಹ ವಿವರಿಸಿದ್ದಾರೆ. ಜಲ್ಲಿಕಟ್ಟುವಿನ ಇತಿಹಾಸ, ಎತ್ತುಗಳ ನಡವಳಿಕೆ, ಗೂಳಿಗಳ ಅನುವಂಶಿಕ ವಿವರಗಳು, ಸಣ್ಣೆತ್ತು ಮತ್ತು ದೊಡ್ಡೇತ್ತುಗಳ ನಡವಳಿಕೆಗಳ ವ್ಯತ್ಯಾಸಗಳು, ಅವುಗಳ ಆಕ್ರಮಣ, ಅವನ್ನು ಬಗ್ಗು ಬಡಿಯುವ ಕ್ರಮ ಇವೆಲ್ಲವನ್ನೂ ಕಣ್ಣಿಗೆ ಕಟ್ಟುವಂತೆ ವಿವರಿಸಿದ್ದಾರೆ ಲೇಖಕರು.
ಮೃಗದ ಅಹಂಗೆ ಪೆಟ್ಟು ಬಿದ್ದರೆ ಅದು ವಿನಾಶಕ್ಕೆ ದಾರಿ ಮಾಡಿಕೊಡುತ್ತದೆ, ಈ ಮಾತು ಮನುಜನಿಗೂ ಅನ್ವಯಿಸುತ್ತದೆ. ಇದೇ, ನನ್ನ ಮಟ್ಟಿಗೆ ಕಾದಂಬರಿಯ ಸತ್ವ ಎನ್ನಿಸುತ್ತದೆ.
ಈ ಕಾದಂಬರಿಯನ್ನು ಕನ್ನಡಕ್ಕೆ ತಂದದ್ದು ಸಂತಸದ ವಿಷಯ, ಅಲ್ಲಿನ ಗ್ರಾಮ್ಯ ಭಾಷೆಯನ್ನು ನಮ್ಮ ಗ್ರಾಮ್ಯ ಭಾಷೆಯಲ್ಲಿ ಓದುವುದು ಚಂದ. ನಾನು ಮೂಲಕ್ಕೆ ಬಂದ ವಿಮರ್ಶೆಗಳನ್ನು ಓದಿದ್ದೇನೆ. ಅಲ್ಲಿ ಅವರಿಗೆ ಕಂಡ ತೋಡಕುಗಳು ನನಗೆ ಇಲ್ಲಿ ಕಾಣಲೇ ಇಲ್ಲ. ಇದು ಬಹುಷಃ ಅನುವಾದಕಾರರ ಗೆಲುವು ಎಂದೇ ಭಾವಿಸುತ್ತೇನೆ. ಇನ್ನೂ ಇತರೆ ಪ್ರಮುಖ ತಮಿಳು ಕಾದಂಬರಿಗಳು ಕನ್ನಡಕ್ಕೆ ಸತ್ಯಕಿ ಅವರಿಂದಾನೆ ಬರಲಿ ಎಂದು ಆಶಿಸುತ್ತೇನೆ.
Gripping. After reading Elantris by Brandon Sanderson for nearly 2 weeks and my mind was filled with magical world of Elantris. Couldn't come out of it and searching for an epic fantasy or mythologicl novel for next read, some how started to read this and it full filled all the expectations. Satisfaction given by this novellet is nothing less than an epic fantasy like Elantirs gave me.
Am I missing some thing here? I didn't like this novelette very much. Esply the long sentences, the repetitive dialogues, banal plot, incoherent story telling style etc. Please let me know why this work is lauded by many? Is its because, this is the first work that talks about this ancient sport in recent years?
சி.சு.செல்லப்பா அவர்களின் இந்தப் புத்தகம் முதல் பதிப்பு வெளி வந்த ஆண்டு 1959. 60 வருடங்களுக்கு மேலாக ஒரு படைப்பு காலம் தாண்டி களம் கொண்டிருக்கிறது என்பதே அந்த புத்தகத்தின் மேன்மைக்கான அளவுகோல். இந்த புத்தகத்தின் கதைக்குள் செல்லும் முன், மிக தத்ரூபமாக சித்தரிக்கப் பட்டிருக்கும் சல்லிக்கட்டு களம். மனிதர்களின் உணர்வுகளை தாண்டி, வாடிவாசலில் இருந்து வெளிவரும் காளைகளின் ரோஷம், வேகம் இவற்றை அச்சு அசல் பிசகாமல் கண் முன் நிறுத்தி கடத்துகிறார் சி.சு.செல்லப்பா அவர்கள்.
ஆறு முதல் எட்டு மணி நேரத்தில் நடக்கும் மனதின் போராட்டங்களை நூறு பக்கங்களே கொண்ட ஒரு சிறிய புத்தகத்தில் நமக்கு கொடுத்துள்ளார்கள். சல்லிக்கட்டின் நிகழ்வுகளை சொன்ன புத்தகங்களில் இது முதல் புத்தகம் என்றே தோன்ற வைக்கிறது. மேலும் தேடித் பார்க்க வேண்டும். வாடிவாசல் என்ற புத்தகத்தின் பெயரால், கதை நடக்கும் இடம் செல்லாயி அம்மன் சல்லிக்கட்டு. அந்த சுற்று வட்டாரத்தில் மிகவும் பெயர் போன சல்லிக்கட்டு.
கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலிருந்து மாட்டை அணைபவர்கள் எல்லாம் திமிர் தெறிக்க, நிமிர் நடை போட்டு வந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் காளைகள், என் திமிலைத் தொட்டு பார்க்கவோ, என் கொம்பில் கை வைக்கவோ, என் சீறும் மூச்சுக் காற்றின் அனலின் முன் நிற்கவோ யாரவது இருக்கிறீர்களா? என்று கேட்பது போல், ஒய்யாரமாக, கம்பீரமாக வந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறு கலை கட்டும் சல்லிக்கட்டின் வாடிவாசலில், எதிர்பார்ப்பும், பரபரப்புமாய் கண்கள் அலைய நிற்பவனை பிச்சி என அறிமுகம் செய்கிறார். கூடவே அவனது மைத்துனன் மருதன்.
இதில் மொக்கையாத் தேவர் என்ற ஜமீன்தாரின் வாடிபுரத்து காளை காரியின் மீது இவர்கள் இருவருக்கும் கண். கருப்பு பிசாசு காரியினை அணைந்த போது தூக்கி அடித்து குடல் சரிய, பிச்சியின் அப்பன் அம்பிளித்தேவன் உயிர் போகிறது. சாதாரணமாக மாடு அணைபவர்கள் அல்ல பிச்சியும், மருதனும் அந்த வட்டாரத்தில் தேர்ந்த மாடு அணைபவர்கள். ஒவ்வொரு அசைவுகளையும் அதன் உணர்சிக்களுக்கு ஏற்ப விவரணை செய்திருக்கிறார் ஆசிரியர்.
இவர்கள் தங்களுக்குள் நக்கல் அடித்து பேசப் போய் அதை கண்டிக்க வரும் அந்த வட்டாரத்து மூத்தவர், பாட்டையா ஆகி, இவர்களின் இதய துடிப்பில் சிறு கையளவு தானும் கலந்து விடுகிறார். சில இடங்களில் இவரின் ஒவ்வொரு காளை பற்றியான விவரிப்புகள் சிலிர்க்க செய்கின்றன. "பிச்சித் தம்பி! கொராலு பிசாசு! பில்லைக் காளை மாதிரி இல்லே" என்று கிழவன் அவன் காதுகளில் பரபரப்பாக சொன்னான். "கொம்பு இம்புட்டுத்தான்; புடிக்குக் கூட வராது. களவாணிக் களுதை. தலையைத் தொட்டிக்கு வெளியே கூட நீட்டாது. மொட்டைக் கொம்பு புடிவழுக்கி தட்டிச்சின்னா விலா எலும்பு பொடிப் பொடியாப் போயிரும். வால் பக்கம் பிடிக்கப் போனா மான் கணக்கா உதைக்கும். ஒரே தவ்வில் வாடி மத்திக்கு வந்து நிக்கிற போது அந்த ஒரு மினிட்டுல அணைஞ்சாத்தான். நல்லா பளக்கி இருக்கானுங்க.இந்த முருகு பய இடது தோள்ளே தெரியுதே கையகள தழும்பு, மூணாம் வருஷம் அது மச்சம் வச்சதுதான்" கிழவன் காளையைப் பற்றித் தனக்கு தெரிஞ்ச சூட்சமத்தையெல்லாம் படபடத்து சொல்லிவிட்டான்.
முருகு தெக்கத்தி வட்டாரத்தில் ஜமீன்தாருக்கு நெருக்கம். அதனால் முதலாளித்துவத்தின் கூடவே வரும் அதிகப்படியான நக்கல், கவுரவம், ரகளை, வெட்டி வம்பு, கள்ளம் என்று வலம் வரும் இன்னொரு பாத்திரம். முருகுவுக்கும் இவர்களுக்குமான உரையாடல்களில் வட்டார, கிராமத்து நக்கல் தெறிக்கும். இவையெல்லாம் தாண்டி பிச்சி காரியை அணைந்தானா அல்லது ஜமீன்தாரின் உச்சக்கட்ட கோபம் இவன் மேல் விழுந்ததா? அல்லது காரி பிச்சியை என்ன செய்தது என்பது மீதமுள்ள கதை.
"வாடிப்புரம் காளை! கருப்புப் பிசாசு! ராட்சசக் காரி!" கத்திய அனைத்து குரல்களிலும் நடுக்கம். திகில் வெடித்துப் பரவியது. வாடிவாசல் அமர்க்களப்பட்டது. சில வினாடிகளில் முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படியெல்லாம் பாதுகாத்துக் கொள்வதென்று அவனவன் அங்குமிங்கும் ஓடிப் பதுங்கப் பார்த்தான். குறிப்பாக அங்கொன்றும் இங்கொன்றுமாக அரை மனதும் கால் மனதுமாக நின்ற சில மாடணைகிறவர்கள் தவிர திட்டிவாசலிலோ அணை மரங்களுக்குப் பக்கத்திலோ வேறு யாரும் இல்லை. துடைத்துவிட்ட மாதிரித் திட்டிவாசலைச் சுற்றிக் குழப்பமின்றி விஸ்தாரமாய் இருந்தது"
சல்லிக்கட்டு ஒரு வீர நாடகமாய் கண் முன் காட்சிகள் விரிகிறது. ஒவ்வொரு அசைவும் அர்த்தம் பொதிந்து இருக்க வேண்டும். ஏனோ தானோ என்று காளையின் மீது அணைதல் தற்கொலைக்கு சமம். ஒவ்வொரு காளையும் ஒவ்வொரு முறையில் வாடி அகலும். மிருகத்தின் ரோசத்திற்கும் மனிதனின் வீரத்துக்குமான சமூக நாடகம் இந்த சல்லிக்கட்டு.
திமிலும், கொம்புகளும் மட்டுமே மாடு அணைகிறவனின் கவனக் கோடுகளாய் இருக்க வேண்டும். அந்த கணம், யாரும் இல்லை. அவனும் காளையும் மட்டுமே. சிறு அசைவு தவறாய் சென்றிடின் உயிர் கூட்டில் இருக்காது. காளையும் மனிதனும் ஒன்றாய் குதிக்கும் அந்த சில வினாடிகளில் மனிதன் வென்று பார்க்கிறான். சில நேரங்களில் கொம்புகள் மனித ரத்தத்தை ருசி பார்த்தும் விடுகின்றன. சி.சு. அவர்கள் அதனாலேயே இதை ஒரு தொழிநுட்பம், சாமர்த்தியம், பளு, புத்தி ஆகியவை சார்ந்த விளையாட்டாய் நமக்கு படைத்திருக்கிறார். இன்றும் கூட ஒரு வடிவாசலின் அருகில் இப்படி 2 பேர் இருக்க மாட்டார்களா என்ன? இருப்பார்கள். படித்துப் பாருங்கள்.....
“மனுசன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்துக்கு அது விளையாட்டல்ல. அதுதான் ஜல்லிக்கட்டு.”
The book is a ringside view to vadivasal Jallikattu and the book does this brilliantly. You can feel the environment, the buzz and the excitement in your bones as you read the book. The language with the 'vattara' tamil is authentic and adds to the feel of the book.
One Jallikattu, 2 youngsters visit from far for the fame. Drawn into a conversation with an old man who has seen many Jallikattu, they strike a frienship as we get to know more about Pichi's intention. The prized bulls including Kari are character in itself and the Zamindar is a powerful presence. For the unitiated (like me), the book explains the format of Jallikattu, the prized catches against the ordinary ones, the rituals and even the techniques of taming the bull.
I translated this one, so had to read when it finally came out in November 2013. The rating is what I've heard from friends who've read it. The story takes place on a hot afternoon in a village in Tamilnadu where a bull taming contest is under way. The period is early 20th century. This novella, originally published in 1949, is considered a classic in the annals of modernist Tamil fiction. Recommended.
Jallikattu has been in the news over the past couple of years. What is it exactly? This novella from 1949 does a great job of describing a jallikattu through the conversations of participants and spectators.
ಒಂದು ಸುಂದರ ರೋಮಾಂಚಕ ಚಲನಚಿತ್ರ ನೋಡಿದಂತೆ ಅನುಭವ ನೀಡುವ ಈ ಚಿಕ್ಕ ಚೊಕ್ಕ ಕಾದಂಬರಿ ಒಂದೇ ಓದಿನಲ್ಲಿ ಓದಿಸಿಕೊಂಡು ಹೋಗುತ್ತದೆ. ನಮ್ಮ ಭಾಗದ ಅಪ್ಪಟ ಗ್ರಾಮ್ಯ ಭಾಷೆಯಲ್ಲಿ ಸತ್ಯಕಿ ಅವರು ಅದ್ಭುತವಾಗಿ ಅನುವಾದಿಸಿದ್ದಾರೆ. ಮನುಷ್ಯ-ಮೃಗ, ಮೇಲು-ಕೀಳು, ಆಚರಣೆ-ಸಂಸ್ಕ್ರುತಿ ಎಲ್ಲವೂ ಒಪ್ಪವಾಗಿ ಈ ಕೃತಿಯಲ್ಲಿ ಮೇಳೈಸಿಕೊಂಡಿವೆ. ಅನುವಾದಿತ ಕೃತಿಗಳ ಬಗ್ಗೆ ಮೂಗು ಮುರಿಯುತ್ತಿದ್ದ ನನಗೆ ಅನುವಾದ ಸಾಹಿತ್ಯದ ಕಡೆಗೆ ಒಲವು ಮೂಡುವಂತೆ ಮಾಡಿದ ಕಾದಂಬರಿ ಎಂದರೆ ತಪ್ಪಾಗಲಾರದು.....🤗
Read it long time back (before my entry into GR). But the scenes of the novel remain fresh in my mind. Is it a fight between the bull and the man or is it a fight between the high caste men and low caste men? Perhaps both. Will have to read it again sometimes later.
ಜಲ್ಲಿಕಟ್ಟು ಆಚರಣೆ ಬಗ್ಗೆ banning and unbanning newsಗಳ ಹೊರತಾಗಿ ನನಗೇನೂ ಗೊತ್ತಿರಲಿಲ್ಲ.ಹಾಗಾಗಿ ಮೊದಲು YouTubeನಲ್ಲಿ ಒಂದೆರಡು ವೀಡಿಯೋಗಳ ನೋಡಿ ಆಮೇಲಷ್ಟೇ ಕಾದಂಬರಿ ಓದಲು ಪ್ರಾರಂಭಿಸಿದೆ. ಆದರೆ ಓದಿ ಮುಗಿದ ಮೇಲೆ ಅನಿಸಿದ್ದೇನೆಂದರೆ ವಾಡಿವಾಸಲ್ ಓದಲು ಯಾವ ಪೂರ್ವತಯಾರಿಯೂ ಬೇಕಿಲ್ಲ; ಸತ್ಯಕಿಯವರ ಅನುವಾದ ಅಷ್ಟು ಸೊಗಸಾಗಿದೆ. ಗ್ರಾಮ್ಯ ಭಾಷೆ, ಮನುಷ್ಯ-ಮನುಷ್ಯರ ನಡುವಿನ ಸಾಮಾಜಿಕ ಅಂತರ, ಜಲ್ಲಿಕಟ್ಟು ಘಟಿಸುವಾಗ ಕಣ್ಣಿಗೆ ಕಟ್ಟುವಂತೆ ಚುರುಕಾದ ದೃಷ್ಯ ವಿವರಣೆ ಎಲ್ಲವೂ ಕಾದಂಬರಿಯ plus points. ಎಲ್ಲೂಕೂಡ ಅನುವಾದಿತ ಕೃತಿ ಎನಿಸದಂತೆ ಓದಿಸಿಕೊಂಡ ಚಿಕ್ಕ ರೋಚಕ ಕಥೆ ಕಡೆಗೊಮ್ಮೆ ಮನಸ್ಸನ್ನು ಸ್ತಂಭೀಬೂತವಾಗಿಸಿ ಮುಗಿದೇಹೋಯ್ತು. "ಮೃಗಕ್ಕೆ ರೋಸ ಬಂದ್ರೂ ಅಷ್ಟೇ.. ಮನುಸಂಗೆ ರೋಸ ಬಂದ್ರೂ ಅಷ್ಟೇ... ಮುಗೀತ್ ಕತೆ"
ಇದನ್ನು ಓದುವಾಗ ಬೇಡವೆಂದರೂ ಹೆಮಿಂಗ್ ವೇ ನೆನಪಾಗುತ್ತಾನೆ.ಅವನು ಗೂಳಿ ಕಾಳಗದ ಸೊಗಸನ್ನು ಬಣ್ಣಿಸಿದ ಬಗೆ ನೆನಪಾಗುತ್ತದೆ. ಜಲ್ಲಿಕಟ್ಟುವನ್ನು ಅದರ ಎಲ್ಲಾ ಸೊಗಸಿನೊಂದಿಗೆ ಆಡುಭಾಷೆಯಲ್ಲಿ ತಂದ ಸತ್ಯಕಿ ಅಭಿನಂದನಾರ್ಹ. ಇಡೀ ಸಣ್ಣ ಕಾದಂಬರಿ ಶರವೇಗದಲ್ಲಿ ಓದಿಸಿಕೊಂಡು ಹೋಯಿತು. ಕತೆಯಲ್ಲಿ ಹೆಚ್ಚಿನ ಒಳಭಾವಗಳಿಲ್ಲ. ಕಪ್ಪು ಬಿಳುಪು ಪಾತ್ರಗಳು. ಆದರೆ ಮನುಷ್ಯನೂ ಮೃಗವೇ ಎಂಬುದನ್ನು ಸಾರುವ ಕತೆ. ಹಳೆಯ ಕಾಲದ ವೀರಗಾಥೆಗಳ ಮಾದರಿಯನ್ನು ಅನುಸರಿಸಿದೆ. ಇದನ್ನು ಆಧರಿಸಿದ ಸಿನಿಮಾ ಬರುತ್ತಿದೆ. ಕ್ಲಾಸಿಕ್ ಕಾದಂಬರಿಯ ಸಾರ್ವಕಾಲಿಕತೆ ಕನ್ನಡ ಅನುವಾದದಲ್ಲೂ ಪಡಿಮೂಡಿದೆ. ಸೊಗಸಾದ ಪುಟ್ಟ ಪುಸ್ತಕ
கடந்த இரண்டு ஆண்டுகளும் சென்னை புத்தக கண்காட்சியில் என்னை வாங்க தூண்டிய புத்தகம் இது. தலைப்பும் திமிறி வரும் ஜல்லிக்கட்டு காளையின் படமும் என்னை தூண்டியது. ஆனால் சி.சு.செல்லப்பா என்ற எழுத்தாளரை பற்றி கேட்டிராத நான் அதை வாங்கவில்லை. இந்த வருஷம் வாங்கித்தான் பார்ப்போமே என்று பொங்கலன்று வாசிக்க ஆரம்பித்தது தான் இந்த குறு நாவல். இந்த ரகத்தில் இதுவே எனது முதல் வாசிப்பு. இப்படி குறு ���ாவல் என்று ஒரு ரகம் இருக்கிறதே இப்போது தான் அறிவேன். ஒரு வேனல் மதியம் மதுரை பக்கம் செல்லாயி கோவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. மாடு புடி வீரர்களின் சிம்மசொற்பனமான காரி என்ற ஜமீன்தாரின் காளை. தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான காரியை அடக்க அந்த ஜல்லிக்கட்டிற்கு வரும் பிச்சி. இவர்கள் இடையே நடக்கும் போட்டியே கதை. தமிழர்களின் மிக முக்கியமான அடையாளங்களில் ஒன்று இந்த ஜல்லிக���கட்டு. ஜல்லிக்கட்டிற்க்க்காக அணிதிரண்ட மக்கள் வெள்ளத்தை நாம் எல்லாரும் கண்டதே. ஆனால் ஜல்லிக்கட்டு என்றதை பற்றி நாம் அறிந்ததெல்லாம் தொலைக்காட்சியிலும் திரைப்படத்திலும் கண்டது மட்டுமே. கொஞ்சம் நீளமாக எழுத பட்ட சிறு கதை மாதிரி தெரியும் இந்த கதையில் அதையும் தாண்டி பல விஷயங்கள் சொல்கிறார் எழுத்தாளர். ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தின் அமைப்பு, மாடுகளின் வகைகள், எத்தனை வகை போட்டிகள் நடக்கும் என்பது முதல் வாடிவாசல் தாண்ட நிற்கும் காளைகளின் நோட்டம் இடும் சாத்திரம், அங்கு நிற்கும் மக்கள் மற்றும் மாடுகளின் எண்ணங்கள் வரைக்கும் இங்கு சொல்லப்படுகின்றது. மாடு புடி வீரர்களாக அந்த ஊருக்கு வரும் இரண்டு இளைஞர்கள், ஒரு பாட்டா, ஒரு ஜமீன்தார், அவரின் காளை - இப்படி சொல்ல போனால் ஒரு சில பாத்திரங்களே உள்ள போதிலும் ஒரு முழுமையான ஜல்லிக்கட்டு அனுபவத்தை தருவதில் செல்லப்பா அவர்கள் வெற்றி பெறுகிறார். ஒரு நேர்காணல் அனுபவம் என்று சொல்வதே சரி. வீரம், விவேகம், ஜாதி அமைப்பு இதை பற்றி எல்லாம் பேசியிருப்பவர்; காளையின் வீரத்தையும் விவேகத்தையும் அதே முக்கியத்துவத்துடன் முன்வைக்கிறார். அப்பனின் பேரை காக்க துடிக்கும் இளைஞனாக பிச்சி வருகிறான். அவனது வீரம் மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் நடக்க வைக்கும் சாமர்த்தியம் ரெண்டும் ஒரு படத்தில் வரும் கதாநாயகனை நம்மக்கு காட்டுகிறது. ஜமீன்தார் பாத்திரமும் நன்கு வரையப்பட்டிருக்கிறது. காரி மாடு என்பது அவர் பெருமை. அந்த மாடை இது வரை யாரும் வென்றது இல்லை. அதை ஆட்டம் காட்டும் பிச்சியை பார்க்கையில்; தனது கெளரவம், பெருமை எல்லாம் இவனால் போய்விடுமோ என்று ஒரு பக்கம் நினைத்தாலும் மறு பக்கம் அவனது திறமையை கண்டு ஆமோதிக்கிறார். ஒரு மாட்டிற்கும் மனிதனுக்கும் நடக்கும் போட்டி இரு ஜாதிகளுக்கு நடக்கும் போட்டியாகிறதா என்று கேட்டால் ஆம் என்று தான் சொல்ல வைக்கிறது. அதனை கண்கூடாக காட்டாத போதிலும்!! வட்டார பேச்சு புரிய கொஞ்சம் கஷ்டமா தான் இருந்தது. முதல் இரண்டு மூன்று பக்கங்கள் சுவாரஸ்யம் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு ஒரே வாசிப்பில் முடிக்க தூண்டிய புத்தகம் இது. செல்லப்பா என்பவர் எழுதிய அற்புதமான படைப்பு இது. அவரை பற்றி படித்த வரையில் பெரும் புகழும் தேடி வந்த போதும் அதனை எல்லாம் மறுத்தவர். அவரை ஏன் இன்னும் மக்கள் அறியவில்லை என்று திகைப்பாக உள்ளது. 1959 கால அளவில் எழுதப்பட்ட படைப்பு இது. காலத்தை வென்றவை என்று சொல்லப்படும் படைப்புகளில் நிச்சயம் இந்த வடிவாசலுக்கு ஒரு தனி இடம் கொடுக்கலாம்.
This entire review has been hidden because of spoilers.
பாரம்பரிய விளையாட்டான ஏறுதழுவுதல் குறித்த ஒரு குறுங்கதை.
தன் வீரத்தைக் காட்டும் களம் என்று என்ன தான் ஓர் ஆண் சூளுறைத்தாலும், அக்களம் அம்மனிதனின்/அச்சாதியின் பெருமையை நிலை நாட்டவே முதன்மையாகச் செயல்படுகிறது. -"தலைமுறைக்கும் நிக்கிம்னு சொல்லு". இதுவே எதிர்கட்சியில், ஏறின் உரிமையாளன் தனது வெற்றியை ஓர் தகுதிநிலைக் குறியீடாக, அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்கிறான். -"தான் பிடிபட்டதுடன் ஜமீன் பெயருக்கே உலைவைத்த அந்தக் காரி அவர் முன் இன்னும் செருக்கடித்துக் கொண்டிருந்தது". பெருமாள் முருகன் முன்னுரையில் சரியாகக் கூறியது போல், ஜல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்டது "வாடிவாசல்". ஜல்லிக்கட்டை நேரில் காண்பது போல் மிக விறுவிறுப்பாகவும், காளையை அடக்கினான் என்பதைத் தாண்டி தழுவுதலின் நெளிவு சுளிவுகளையும், அவ்விடத்தில் கோரப்படும் புத்திசாலித்தனத்தையும் 1959-லேயே அபாரமாக விவரித்திருக்கிறார் ஆசிரியர். ஒரு கட்டத்தில் படுத்துக்கொண்டு வாசித்த என்னை பதைபதைத்து எழுந்து உட்காரச் செய்தது சில பக்கங்கள். இது விளையாட்டு என்று கூடத் தெரியாத விலங்கின் உயிரே முடிவில் தோல்விக்கு விலையாகக் கொடுக்கப்படுகிறது என்னும் யதார்த்தம் மனதில் ஒரு தாக்கத்தை உருவாக்குகிறது. Are "THEY" really the animals here?!
ಸುಮಾರು 60 ವರ್ಷಗಳ ಹಿಂದೆಯೇ, ಇತ್ತೀಚಿನ ಸಿನಿಮಾಕ್ಕೆ ಚಿತ್ರಕಥೆ ಬರೆದ ಹಾಗಿದೆ ಈ ಕಥೆ..2 ಗಂಟೆಯ ಸಿನೆಮಾದ ರೀತಿ ಕಥೆ ಕಣ್ಣ ಮುಂದೆ ನಡೆದು ಹೋಗುತ್ತೆ.. ಅನುವಾದಕರು ಓದುಗನಿಗೆ ಯಾವುದೇ ಕಷ್ಟ ಕೊಡದೆ ಇದನ್ನ ಈ ನೆಲದ ಕಥೆಯಾಗಿಸಿ ಬಿಟ್ಟಿದ್ದಾರೆ..
அதாவது காளையின் கொம்பை கூட கண்டு அஞ்சும் ஆடவனை ஆயர் மகள் தழுவமாட்டாள் என்பதே அதன் அர்த்தம். (கோடு = கொம்பு; புல்லாள் = தழுவ மாட்டாள்)
ஏறு தழுவுதல் தமிழனின் பாரம்பரிய விளையாட்டு. அதன் முக்கியத்துவத்தை கொண்டு எழுதப்பட்ட குறுநாவல் தான் "வாடிவாசல்".
ஜமீன்தாரின் காரி காளையை அடக்க பிச்சியும், மருதனும் செல்லாயி அம்மன் கோவில் ஜல்லிக்கட்டுக்கு வருகிறார்கள். திட்டம் வகுக்கிறார்கள். ஏன் காரியை மட்டுமே அடக்க பிச்சி நினைக்கிறான்? காரணம் என்ன என்று விறுவிறுப்பாக நகர்கிறது.
காலை அடக்கும் களத்தையும், காளைகளின் ரோஷத்தையும் அழகாக விவரிக்கிறார். பாட்டையா என்னும் கிழவன் சுவாரசியமான கதாபாத்திரம். காளைகளின் ஒவ்வொரு நகர்வுகள் பற்றி பிச்சிக்கு எடுத்துரைக்கிறார்.
வெறும் 100 பக்கங்களே கொண்ட இந்த நாவல் நிச்சியம் அனைவரும் படிக்க வேண்டும். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் இந்நாவலை தழுவி படம் வரவிருக்கின்றது.
வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதால் தேடிப்படித்தது. செல்லாயி சாட்டு என்ற ஊரில் நடக்கும் சல்லிக்கட்டிற்கு, தன் தந்தையை குத்திக்கிழித்த காளையை அடக்க வரும் பிச்சி என்பவனை பற்றிய கதை.
ஜமீனின் காளை, பழி வாங்க துடிக்கும் மகன், எளிய கதைமாந்தர்கள் என ஒரே சல்லிக்கட்டு போட்டியில் மொத்த கதையையும் கோர்த்திருக்கிறார்.
இக்கதை 1950 களில் எழுதப்பட்டது.
100 பக்கங்கள் கொண்ட சிறுகதை. புதிதாக வாசிக்க ஆரம்பிப்பவர்களுக்கு ஏற்ற புத்தகம்.
புத்தகம் : வாடிவாசல் ஆசிரியர் : சி. சு. செல்லப்பா பக்கங்கள் : 104 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம்
பொங்கலின் போது ஜல்லிக்கட்டைத் தொலைக்காட்சியில் பார்ப்பேன். பெரும் உற்சாகத்துடன் ஒரே ஒரு முறை நேரிலும் கண்டிருக்கிறேன். வெறும் பொழுதுபோக்கிற்காகப் பார்ப்பதால் ஐல்லிக்கட்டைப் பற்றிய மேம்போக்கான செய்திகள் மட்டுமே அறிவேன். தற்போது நடக்கும் ஜல்லிக்கட்டில் கூட ஏதேனும் அரசியல் இருக்கிறதா என எனக்குத் தெரியவில்லை.
இப்புத்தகம் 50-களில் நடந்த ஜல்லிக்கட்டு பற்றிப் பேசுகிறது. அதனால் பெரிய அளவில் இக்கதையுடன் ஒன்றிப் போக முடியவில்லை. ஜல்லிக்கட்டில் தகப்பனைக் கொன்ற காளையை, மகன் பிச்சி அடுத்து வரும் ஜல்லிக்கட்டில் வீழ்த்த நினைக்கிறான். அந்தக் காளையோ ஜமீன்தாருடையது. அதனால் சந்திக்கும் சிக்கல் என்ன? பிச்சி காளையை வீழ்த்தினானா இல்லையா? காளை என்ன ஆனது? என்பதே கதை.
சில பத்திகளை இரண்டு மூன்று முறை படிக்க வேண்டியதாயிருந்தது. சில உரையாடல்கள் சமயங்களில் மிகைப்படுத்தப்பட்டது போல தோன்றியது. இதுவே இப்புத்தகத்தின் மீது பெரிய ஈர்ப்பு ஏற்படாமல் போனதற்கு காரணம் என நினைக்கிறேன்.
Take away from this book🤔 நேர மேலாண்மையில் நான் எப்போதும் பின்தங்கியே இருக்கிறேன். நான் திட்டமிட்டபடி ஒருநாளும் நகர்வதில்லை. வாடிவாசலில் பிச்சி எல்லா காளைகளையும் அணையாமல் தேர்ந்தெடுத்த சில காளைகளை மட்டுமே அணைய முயற்சி செய்வான். அதுபோல தேவையற்றதைத் தவிர்த்து முதன்மையான பணிகளை முதலில் தேர்ந்தெடுத்து செயல்படுத்துதல் வேண்டும் என மூளை நினைவுபடுத்தியது. திட்டமிடுதல் பற்றியே பெரும்பாலும் நினைத்துக் கொண்டிருப்பதால் என்னவோ இப்படித் தோன்றியது என நினைக்கிறேன்.
வரிகளை படிக்க படிக்க மனதில் விரிகிறது காட்சி. மிகவும் சிறிய புத்தகமாதலால் ஒரே ஓட்டத்தில் முழுக் கதையயும் முடிக்க ஏதுவாக இருக்கிறது. வாசிப்பில் அ'ன்னா பாடுபவர்களுக்கு நான் பரிந்துரைக்கும் புத்தகம். வட்டார வழக்காக இருந்தாலும் பரிந்துகொள்ள எந்ந தடையும் இல்லை. 'பாட்டையா' கதாபாத்திரம் இன்னும் மனதில் நிற்கின்றது...என்றும் நிற்கும்.
"வாடிவாசல்"- சி.சு.செல்லப்பா ***************************** ஜல்லிகட்டு களத்தில் நடக்கும் மனிதனுக்கும் மிருகத்துக்குமான போட்டியை அடிப்படையாக கொண்ட குறுநாவல், மதுரை வட்டார வழக்கில் இயற்றப்பட்டு 1959ல் வெளிவந்துள்ளது.
சங்க காலம் முதல் "ஏறு தழுவுதல்" என்ற வகையில் தமிழ்நிலத்தில் ஜல்லிகட்டு நடைமுறையில் இருந்துவந்துள்ளது. இதனை, "கலித்தொகை"யின் சிற்சில வரிகள் மூலம் நாவலின் முகவுரையில் மேற்கோள்களாக சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.
ராஜமய்யரின் "கமலாம்பாள் சரித்திரம்" மற்றும் கு.ப.ரா அவர்களின் "வீரம்மாளின் காளை" போன்ற படைப்புகளை கொண்டு, தமது பாணியில் ஜல்லிகட்டு போட்டி என்ற கருவினை கொண்டு இந்நாவல் இயற்றப்பட்டதாக முன்னுரையில் கூறப்பட்டிருக்கிறது.
பிச்சி, மருதன், கிழவன், ஜல்லிகட்டு மாடுகள்(காரி/கொரா), ஜமின்தார், முருகு, அம்புலி என குறைந்த கதைமாந்தர்களை கொண்டு அற்புதமான வர்ணனையின் மூலம், துடியான ஜல்லிகட்டை வாடிவாசல் பக்கத்தில் நம்மை நிற்கவைத்து தத்ரூபமாக விளங்க காட்டியிருக்கிறார், திரு சி.சு.செல்லப்பா.
மாட்டின் குணம், மாடுபிடித்தலின் நுணுக்கங்கள், மாடு அணைபவருக்கான திறம்/குணம், காளை மாடு வளர்ப்பதில் உள்ள கர்வம்/பெருமை.,போலவே அதை சல்லிகட்டில் அடக்குவதிலும்., ஊர்/குல பெருமைகள், ஜல்லிகட்டில் பார்வையாள கிழவனின் வட்டார கேலி பேச்சுக்கள், என அனைத்தும் உள்ளடக்கியதாக இருக்கிறது இக்கதை.
அதிலும், 'காரி' என்ற முரட்டு காளை மாட்டை, அதன் திமிலையும் கொம்பையும் பிடித்து, "பிச்சி" அணையும் உக்கிரமான போட்டி பக்கங்கள், நிச்சயம் மயிற்கூச்சரியும் அனுபவத்தை தரவல்லது.அப்போட்டியின் முடிவில், அக்காளைக்கும், பிச்சிக்கும் ஏற்பட்ட முடிவு, மனிதனுக்குண்டான வைராக்கியம், மான/அவமானங்கள் எவ்வளவு ஸ்திரமானது என்பதனை பொட்டில் அடித்தாற்போல வெளிக்காட்டப்பட்டிருக்கிறது.
இரத்தங்கள் சிந்தபடும், மனிதக் குடல்கள் முதல் உயிர்கள் சரியும் களமான ஜல்லிகட்டினை பற்றிய நுட்பமான புரிதலை தரவல்ல ஆவணம் இப்படைப்பு. அதனாலேயே ஐந்து தசாப்த வருடங்கள் தாண்டியும் உயிர்ப்புடன் இருக்கிறது இக்கதை.
இந்த கதையினை தழுவி "இயக்கநர் வெற்றிமாறன்", " நடிகர் சூர்யாவை" வைத்து திரைப்படம் இயக்கவிருப்பதாக சமிபத்தில் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஜல்லிக்கட்டினைச் சுற்றி நடைபெறும் குறுநாவல் இது. பல வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் குடலைக் கிழித்தெடுத்த காரிக் காளையை அடக்க வரும் மகன் பிச்சி, தனது மச்சான் மருதன் மற்றும் புதிதாய் ஸ்நேகம் பெற்ற உள்ளுர்க்கிழவன் ஆகியவர்களின் உதவியையும் உரையாடல்களையும் வைத்து நடத்தும் போராட்டமே இந்த குறுநாவலின் கதைக் கூறு. மதுரை சமுகத்திய பண்பாட்டு இனிமைகளை பேச்சுவழக்கிலும் காளை போட்டிகளில் நடைபெறும் தனிப்பட்ட மனித அரசியல் போராட்டங்களையும், சாதிய ஆதிக்கங்களையும் கதை வடிவில் எளிமையாக சித்தரித்துள்ளார் ஆசிரியர்.
'ஜல்லிக்கட்டை மிருகவதை என்றும் காட்டுமிராண்டி விளையாட்டு என்றும் விமர்சிக்கும் ஜீவகாருண்ய நேசகர்கள், ஜல்லிக்கட்டை வெவ்வேறு தளங்களில் வைத்துப் பார்க்கும் பார்வையைக் கொண்ட வாடிவாசலை ஒரு முறையேனும் வாசித்துப் பார்க்க வேண்டும்' என்று முன்னுரையில் பெருமாள் முருகன் கூறும் கருத்தினை முழுமையாக மனம் மறுக்கமுடியவில்லை. பண்பாட்டின் பொருட்டு வாழ்ந்து வரும் சில நடைமுறைகளை நம்மால் முழுமையாக ஆராய்ந்து பிரிக்க முயல்வது எப்போதும் எளிதான காரியம் அல்ல என்பதை புலப்பட முயற்சி செய்கிறது. ஆயிரம் இருந்தாலும், ஞானமுள்ள மனிதன் (Homo sapiens) என்று நம்மை நாமே கூறிக்கொள்ளும் அளவிற்கு தானே நம்மிடம் ஞானம் உள்ளது? "மிருகத்துக்கு ரோஸம் வந்தாலும் போச்சு, மனுசனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு!
"என்ன இருந்தாலும் அது மிருகம்தானே!" என கதையினை முடிக்கும் பொருட்டு மனிதனின் வெகுளியல்பை அல்லது ஞானத்தைக் குறியீட்டிய ஆசிரியர் சி. சு. செல்லப்பாவின் மற்ற (குறு) நாவல்களை படிக்க ஆர்வமும் தோன்றுகிறது. சந்தர்ப்பங்களை நோக்கி.