எது கறுப்புப் பணம்? இது எப்படி உருவாகிறது? யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள்? எவ்வளவு? ஒரு நாட்டின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு கறுப்புப் பணம் மிகப் பெரிய பிரச்னையா? கறுப்புப் பணத்தை மீட்டெடுக்கவேண்டும் என்று ஒவ்வொரு-முறையும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்கின்றன. ஆனால் அவர்களே ஆளுங்கட்சியாக மாறும்போது எதுவும் செய்வ-தில்லை. ஏன் இந்த முரண்?
Charu Nivedita (born 18 December 1953) is a postmodern, transgressive Tamil writer, based in Chennai, India. His novel Zero Degree was longlisted for the 2013 edition of Jan Michalski Prize for Literature. Zero Degree was inducted into the prestigious '50 Writers, 50 Books - The Best of Indian Fiction', published by HarperCollins. Vahni Capildeo places Charu Nivedita on par with Vladimir Nabokov, James Joyce and Jean Genet, in her article in the Caribbean Review of Books. He was selected as one among 'Top Ten Indians of the Decade 2001 - 2010' by The Economic Times. He is inspired by Marquis de Sade and Andal. His columns appear in magazines such as Art Review Asia, The Asian Age and Deccan Chronicle.
சாரு தன் தபால்துறை அனுபவங்களை, அதிகாரிகள் சகா மனிதன் மீது செலுத்தும் அடக்குமுறைகளையும், அதனால் தனி மனிதன் படும் அவமானங்களையும் தனக்கே உரிய humourஉடன் பல கதைகளாக நாவலின் முதல் பகுதியான கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளில் வருகிறது.
நாவல் non -linear ரில் செல்கிறது. ஒரு கதை - அதற்குப் பின் குறிப்பு அந்தப் பின் குறிப்பிற்கு வேறொரு பின் குறிப்பிற்கு மற்றொரு பின்குறிப்பு. இப்படியாக labyrinth உள்ளே மாட்டிக்கொண்டார் போல் தான் இருக்கிறது. மற்றொரு அத்தியாயம் நடுவாக்கியத்தில் இருந்து ஆரமிக்கிறது, கதை வளர்ந்து மறுபடியும் ஆரமித்த இடத்திற்கே வந்து முடிகிறது.
நாவலில் ஒரு இடத்தில் கண்ணாயிரம் பெருமாளுக்கு தன்மீது ஒரு லாரி மலம் விழுறாப்போல கனவு வருகிறது அலறிஅடிச்சு எழுந்திக்கிறாரு மனைவி என்ன ஏதுன்னு கேட்க "ஒண்ணும் இல்ல பேய் கனவு" "இந்த காலத்துல போய் பேய் பிசாசுன்னுட்டு" இங்க மலத்தைச் சாதியின் குறியீடே வச்சிட்டு மனைவி கேட்டதை மறுபடியும் வாசிச்சு பார்த்த சமகாலத்து மேல்தட்டு சாதிய ஒடுக்குமுறைக்கு சொல்ற மறு மொழியவே தெரியுது.
இனி நாவலில் இருந்து சில பகுதிகள்
க.பெருமாள் நண்பர்கள் கூட காரசாரமா பேசிட்டு இருக்கும்போது "நான் குடிக்கிறதை நிறுத்திட்டேன்" "என்ன? எப்போல இருந்து?" "இரண்டு நாளா"
க.பெருமாளுக்கு பிடிக்காதவனு ஒரு பட்டியல் அதை வைத்து ஒரு கதை. ஆனா அந்தப் பட்டியலே ஒரு சுவாரசியமான ஒன்று இந்திய, இந்தியர்கள், பிச்சைக்காரன்,.. பெண்ணியவாதி, anti - phedophile , பெண் கவிஞர்கள் இத்தியாதி இத்தியாதி political correctness , அர்த்தம். இதுல highlight யே கடைசி இரண்டு தான்.
IAS interview :
‘ஓ... உங்கள் ஊரில் மற்றொரு விசேஷமும் உள்ளதே, தெரியுமா?’ ‘இல்லையே...’ ‘விவேகானந்தர் உங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்...’ ‘ஓ...’ ‘என்னது, எல்லா கேள்விகளுக்கும் ஒரு மாதிரியாக பதில் சொல்கிறீர்கள்? விவேகானந்தர் பற்றி உங்கள் அபிப்ராயம் என்ன?’ ‘அவரைப் பற்றி எனக்கு ஒரு அபிப்பிராயமும் இல்லை...’ ‘நீங்கள் என்ன நாஸ்திகரா?’‘ ‘ஆமாம்...’ ‘சரி, மும்மொழித் திட்டம் பற்றி உங்கள் கருத்து என்ன?’ ‘அது சரியல்ல. இந்தி மொழி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயற்சிக்கும் திட்டம் அது.’ ‘என்னது, இந்தி மொழி ஆதிக்கமா... என்ன பேசுகிறீர்கள் நீங்கள்? உங்களைப் பார்த்தால் நக்ஸலைட் போலத் தெரிகிறது. உங்களை எப்படி அய்யாரெஸ்ஸில் விட்டார்கள்?’
இந்தப் பகுதியில் கவனிக்க வேண்டியது
விவேகானந்தர் - இந்தி மொழி. இதில் இருந்தே இது ஒரு வட இந்திய இந்துத்துவ அதிகாரிகள்னு சொல்லிடலாம்.
நாவலில் மற்றொரு பகுத்து : வளையல் உருட்டும் சிறுவர்கள் தினமும் 16 மணி நேரம் உருட்டுகிறார்கள். தினக் கூலி 30 ரூபாய். ‘தேவடியாப் பசங்க. குளிப்பதுகூட கிடையாது. அந்த நேரத்திலும் வளையல் உருட்டி காசு சம்பாதிக்கலாம் என்று பார்க்கிறார்கள்’ என்றார் மேலாளர்.
‘I really love women. My enthusiasm for pussy is one of my few remaining recognisable, fully human qualities.’
Perhaps the ideal novel to start reading Charu. Won't reveal anything about the novel except it is about bureaucratic aristocracy in India. A well known, often ignored fact. Still have vivid memories of the night when I picked up the book and read only the preface. Within seconds I descended into a dizzy state of enjoyment. It has got me out of depression twice. A Must Read.
இந்த நாவல் இரண்டு பகுதிகளாக வருகிறது இரண்டுமே முற்றிலும் வேறு வேறு தளங்களையும் வேறு வேறு கதைகளையும் கொண்டவை. முதல் பகுதி கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின் குறிப்புகளும். இதில் கண்ணாயிரம் பெருமாள் தபால் இலாகாவில் குமாஸ்தாவாக வேலை செய்த காலகட்டங்களில் நடக்கும் அதிகாரத்தின் மீறல்களும், அதிகாரிகளின் வேடிக்கை போக்கையும் அபத்தமான அலுவலக நடவடிக்கைகளையும் பதிவு செய்திருக்கிறார். அனைத்து அரசு அலுவலகங்களும் எவ்வாறு ஒரு பைத்தியக்கார விடுதியை போல செயல்படுகிறது என்பதை இந்த முதல் பகுதி முழுவதும் விவரிக்கிறது எண்பதுகளில் முதன்முதலாக அரசு பதவிகளை பெற்றவர்கள் தனக்கு கீழே வேலை செய்பவர்கள் எவ்வாறு மோசமாக நடத்துகிறார்கள் என்பதற்கு இதில் வரும் இந்தராணியும் வர்கீஸ் ம் சிறந்த உதாரணம் இன்றும் கூட பல அரசு அலுவலகங்கள் இந்த நிலையிலேயே இருப்பதை நாம் காணலாம். தனக்கு கீழ் இருக்கும் பணியாளர்களை தன்னுடைய ஏவல் ஆட்களாக பயன்படுத்திக் கொள்வது இன்னும் அனைத்து அலுவலகங்களிலும் காணலாம். தன் முன் இருக்கும் மனிதனை தனது அதிகாரத்தால் கூனி குறுக செய்யமுடியும் என்ற எண்ணம் ஒருவனுக்கு வரும் போது அவன் தனது அதிகாரத்தின் சவுக்கை சுழற்றுகிறான். பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பி கொண்டே போகிறது.. பாரிஸ் மெத்ரோ ஃபிளாட் பாரத்தில் ஒரு பெண் சுதந்திரமாக சிறுநீர் கழிக்கிறார் அதை யாரும் கண்டுகொள்ளவில்லை அவ்வளவு இயல்பான விசயமாக இருக்கிறது.. அதை பார்த்த பெருமாள் "மனித சமுகத்தின் சுதந்திரம் இங்கே மூத்திரமாக ஓடிக்கொண்டிருக்கிறது பார்" இந்த மூத்திரத்தை நான் முத்தமிட விரும்புகிறேன் என்பான்...
இரண்டாம் பகுதி:
ராஸ லீலா இதில் இணையத்தில் ஏற்படும் போலியான உறவுகள் குறித்து சாடுகிறார்.. அதே நேரத்தில் நேரிலும் மனிதர்கள் அவ்வாறு தான் இருக்கிறார்கள் திடீரென்று உறவை முறித்துக் கொள்கிறார்கள் அதே தான் இணைய வெளியிலும் நடக்கிறது. இதை குறித்த திரைப்படம் இன்று நூறு கோடி வசூல் செய்து உள்ளது. ஆனால் அந்த திரைப்படம் இணைய உரையாடலை சும்மா எட்டி பார்த்து உள்ளது " மாமா குட்டி" என்று ஆனால் நம்பவே முடியாத உரையாடல் அங்கே நடக்கிறது 2006 லே இப்போது அது எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கும் என்று பார்த்து கொள்ளுங்கள் அதை மறைவு இல்லாமல் அப்படியே இரண்டாம் பகுதியில் வருகிறது. புத்தகத்தின் அனைத்து பக்கங்களிலும் பகடி விளையாடுகிறது மானிடத்தின் துயரை இதன் பகடியாக எழுத முடியும் என்பதே இதன் வெற்றி..