திரைக்கதை எழுதுவது எப்படி? ❤️
•
சினிமா, எங்கள் நிகழ்கால வாழ்வியல் அன்றாடத்தில் ஒன்றாகிப்போன ஓர் கலையம்சம். ஒரு நல்ல சினிமா, தனிமனிதனின் பொழுது போக்கிற்கான நுகர்வாக மட்டும் நிற்பதில் இருந்து விலகி, மனித வாழ்வின் இன்ப துன்பங்கள் கலந்த அழகியல் மீதான எதிர்பார்ப்பையும், சக மனிதர் மேலும், மனிதத்தின் மேலும் கொண்ட நம்பிக்கையையும் வலுவாக்குவதோடு, சமூகம் சார்ந்த சக்தி மிக்க கருத்து மாற்றக் கருவியாகவும் விளங்குகிறது.
•
இத்தகைய வலுக்கொண்ட சினிமாவின் மிக முக்கிய ஓர் அம்சமே, திரைக்கதை. அதைச் சரிவர எழுதுவது எப்படி? திரைக்கதையின் அம்சங்கள் என்னென்ன? இக்கலையில் சிறக்க என்ன வழி? போன்ற கேள்விகளுக்கு சுஜாதா அவர்களின் ஆழமானதும், புரிந்துகொள்ள இலகுவானதுமான பதில்களே இப்படைப்பு. திரைக்கதை பற்றி அறிய ஆவலுள்ளவர்களுக்கும், அத்துறையில் நுழைய/சிறக்க விரும்புபவர்களுக்கும், ஏன், சினிமா எழுத்து மீது பற்றுள்ளவர்களுக்கும் கூட இந்நூல் ஒரு பொக்கிஷமே.
•
பின்னிணைப்பில் பதிக்கப்பட்டுள்ள ‘வெளியேற்றம்’ சிறுகதையும், ‘கற்பூரம்’ என்ற உதாரணத் திரைக்கதையும் வாசகர்களுக்கு கூடுதல் விருந்து.
•
“திரைக்கதை என்பது பார்வையாளனின் நிறைவேறாத இச்சைகளை நிரப்புவது என்று சொல்லலாம். நிறைவேறா எண்ணங்கள், ஆசைகள், பயங்கள் இவைகளுக்கெல்லாம் வடிகால் அல்லது மற்றவர் வாழ்க்கையில் பங்குகொள்ள ஏற்படும் வாய்ப்பு என்றுகூட சினிமாவைச் சொல்லலாம்.” -புத்தகத்திலிருந்து