போதைக் கடத்தல்காரர்களின் தலைமையகம் கொலம்பியா: குலதெய்வம் பாப்லோ எஸ்கோபர். சட்டத்தின் ஒட்டையைப் பயன்படுத்தி சரக்குகளை வாங்கி விற்கும் சாதாரண கடத்தல்காரன் இல்லை இவன். வேண்டிய இடத்தில்,வேண்டிய நேரத்தில் மிக அநாயசமாகத் துளைகளைப் போட்டுக்கொண்டு முன்னேறிய இரும்பு எலி. நம்ப முடியாத அளவுக்கு மாபெரும் சாம்ராஜ்ஜியம் ஒன்றை உருவாக்கி வாழ்ந்தவன். ஓர் அரசாங்கத்திடம் இருப்பதைக் காட்டிலும் அதிகமான பணம். அசைக்க முடியாத செல்வாக்கு. மேலாக, அசாதாரணமான காரியங்களைச் கச்சிதமாகச் சாதித்து முடிக்கும் செய்நேர்த்தி. அமெரிக்காவின் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டியெடுத்தவன். உலகம் முழுவதும் இன்று பரவியிருக்கும் போதை நெட் ஒர்க் என்பது எஸ்கோபர் போட்டுக்கொடுத்த வரைபடங்களின் அடிப்படையில் உருவானதுதான். போதை விற்ற காசைக் கொண்டு பல புரட்சி இயக்கங்களுக்கும் உதவிய விசித்திரப் பிறவி. மிகப்பெரிய கிரிமினல் என்று கொலம்பிய அரசும் பல தேச அரசாங்கங்களும் கூவிக் கதறியபிறகும் கொலம்பிய மக்கள் மட்டும் ஏன் எஸ்கோபரை ஒரு நடமாடும் தெய்வமாகப் பார்த்தார்க்ள்? கிள்ளிக்கொடுக்கவும் மனம் வராத அரசியல் வாதிகளுக்கு மத்தியில் அவன் அள்ளிக்கொடுத்ததாலா? கொலம்பிய போலீசாரிடம் அவன் சிக்கிக்கொள்ள இருந்த சமயம் ஒரு நகரமே அவனைச் சுற்றி அரண் போலிருந்து அடைகாத்ததெல்லாம் சரித்திரத்தில் வேறெப்போதும், எங்கேயும் நடந்திராதவை. சர்வேதேச போதைக் கடத்தல் நெட் ஒர்க் குறித்த முழுமையான புரிதல் இந்த நூலின் மூலம் சாத்தியமாகும்.
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.
Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.
Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.
Pa. Raghavan has created a unique genre in Tamil writing—simplifying complex global events and presenting them in a way that feels both accessible and thrilling. I’ve always admired how Dollar Desam managed to capture the sweep of American policy, and how books like Oil Regai and the one on Bin Laden showed that with the right research, you can weave a coherent, almost cinematic narrative.
என் பெயர் எஸ்கோபர் is a perfect example of this craft. Written way back in 2000s, before Narcos made Pablo Escobar a household name, Raghavan had already introduced Tamil readers to the legend of Colombia’s drug overlord. Even today, when I see Escobar references pop up in Tamil cinema (Vikram, for instance) I feel the urge to go and watch Narcos.
Reading it felt like picking up a thriller. From Escobar’s early days as a car thief to his meteoric rise and inevitable downfall, the story is told with pace and precision. Raghavan manages to capture not just the violence and ruthlessness of Escobar’s empire, but also the strange charisma that made him larger than life.
For me, this book represents what I love most about Pa. Raghavan’s work: the ability to take distant histories and geopolitics and make them resonate deeply with Tamil readers. It’s history, research, and narrative flair all rolled into one—and it proves that even global figures like Escobar can find a compelling voice in Tamil. The only complaint is the Chennai Tamil that the author has used to communicate resistance.
If anyone who has watched 'Loving Pablo' recently just imagine that as a Match Highlight, whereas this book remains a classical Test match where the details of fine Test Batsman could be lived through by watching it lively. Such a lively commentary on the life of Pablo for the live audience. Hats off Writer Pa. Raghavan!
எஸ்கோபரை கேள்விப்படாதவர்கள் மிகச் சொற்பமாகவே இருப்பார்கள் என நினைக்கிறேன். கோலிவுட் சினிமா முதல் ஹாலிவுட் சினிமா வரை போதைப்பொருள் கடத்தல் சார்ந்த கதை என்றால் அண்ணாரது பெயர் அடிபட்டுவிடும். கொலம்பியாவில் தொடங்கிய அவனது போதைப் பொருள் வியாபாரமும், அது ஈட்டித்தந்த பணமும், அந்த பணம் கொடுத்த தன்னம்பிக்கையும் தைரியமும், அந்த தைரியம் ஏற்படுத்திய ரத்த வெறியும் அவனை உலகின் மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்துவிட்டது. சிறுவயதில் பார்த்த திரைப்படங்களில் வில்லன் போதைப் பொருள் கடத்துவன். காவல் துறையிலும், மற்ற சில துறைகளிலும் லஞ்சம் கொடுத்து கடத்தல் தொழிலை ஏகபோகமாக செய்துவரும் வில்லனை ஹீரோ ஒற்றை ஆளாய் பிடித்து போதைப் பொருளின் அத்தியாயத்தை முடித்து வைப்பது ரீதியிலான படங்களை பார்த்து வளர்ந்த எனக்கு எஸ்கோபரின் வாழ்க்கை பெரும் அதிர்ச்சி.
Netflix-ல் வெளியான "Narcos" சீரியலை பார்க்கும் முன்பே பா.ராவின் இந்த புத்தகத்தை வாசித்திட நினைத்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு Kindle unlimited-ல் புத்தகம் கிடைக்காத காரணத்தால் சீரியலை முதலில் பார்த்துவிட்டேன். ஆனாலும் புத்தகத்தின் விறுவிறுப்பை சீரியலின் காட்சிகள் கண் முன் வந்து கெடுக்கவில்லை.
கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல் அப்பாவி மக்களின் உயிரைப் பறித்த எஸ்கோபார் என் பார்வையில் ஹிட்லருக்கு சற்றும் சளைத்தவன் இல்லை. பணமும், அதிகார வேட்கையும், தான் என்ற உணர்வும் ஒருவனை எந்த எல்லைக்கு அழைத்துச் செல்லும் என்று வாழ்ந்து காட்டிவிட்டுச் சென்றிருக்கிறான் எஸ்கோபார்.
புத்தகத்தை வாசித்து முடித்த பிறகு எஸ்கோபரை கூகுளிட்டேன். எஸ்கோபரின் மகன் அளித்த ஒரு பெட்டியின் சுட்டிக் கிடைத்தது. அதில் "Netflix-ல் வெளியாகி இருக்கும் Narcos நிறைய தவறான தகவல்களை கொண்டிருக்கிறது" என குற்றம் சாட்டியிருந்தார் உவான் எஸ்கோபார். மேலும், "சீரியலில் வருவதைப் போல எங்களை பாதுகாக்க சுற்றிலும் எப்போதும் அடியாட்கள் இல்லை. பெரும்பாலும் தனிமையிலேயே இருப்போம். ஸ்விம்மிங் பூல் வசதி கொண்ட வீட்டிலும் இருந்ததில்லை. நிறைய நாட்கள் சாப்பிட ஒன்றுமில்லாமல் பசியோடு இருந்திருக்கிறோம். ஆனால் எங்களை சுற்றி மில்லியன் கணக்கில் பணம் இருக்கும். அது குறித்து ஒரு பேட்டியின் போது 'சாப்பிட ஒன்றுமில்லாத போது உதவாத அந்த பணத்தை நெருப்பில் போட்டிருக்கலாம்' என்று நான் சொன்னதை, என் தந்தை எங்களுக்கு நெருப்பூட்டுவதற்க்காக பணத்தை வாரி இறைத்து தீ மூட்டுவதாக காட்சிப்படுத்திருக்கிறார்கள். இது போன்று 'ரொமாண்டிசைஸ்' செய்யப்பட்ட காட்சிகள் போதைப் பொருள் கடத்துவது மிகவும் கூலான விஷயம் என்பதை போல சித்தரிக்கின்றன. இதனால் பல இளைஞர்கள் என்னை போனில் அழைத்து 'நான் போதை பொருள் கடத்தலாம் என்றிருக்கிறேன். உதவ முடியுமா' எனக் கேட்கிறார்கள். நான் என்னவோ இதற்கான என்ட்ரி டிக்கெட் வைத்திருப்பவன் போல." என்கிறார். கடைசியாக சொன்னது தான் இங்கே முக்கியம். "இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. 3000-த்துக்கும் அதிகமானவர்களை கொன்று குவித்தவர் என் தந்தை. சீரியலில் வருவதை விடவும் பல மடங்கு வன்முறையை நிகழ்த்தி ஒட்டு மொத்த நாட்டு மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியவர்." என 16 வயது வரை எஸ்கோபரை பார்த்து வளர்ந்த அவனது மகன் சொல்கிறார்.
எஸ்கோபார் செய்த காரியங்களை கற்பனை காட்சிகளாக கோர்த்து ஒரு திரைப்படம் எடுத்தால், "என்னாங்க இது.. கொஞ்சம் கூட லாஜிக் இல்லாம படம் எடுத்திருக்கானுங்க" என சுலபமாக ப்ளூசட்டை விமர்சகர்கள் கிழித்து தொங்கவிட்டுவிடுவார்கள். ஆனால் அதனை நிஜமாக நிகழ்த்திவிட்டு சென்றிருக்கிறான் போதைக் கடத்தல் மன்னன் எஸ்கோபார்.
வாய்ப்பு கிடைத்தால் புத்தகத்தை வாசித்துப் பாருங்கள். அதுவரை "இப்படி ஒருத்தன் இருந்தன்ப்பா" என யார் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்.
என் பெயர் எஸ்கோபர்-கிழக்கின் இன்னொரு குறைப்பிரசவம் கொலம்பிய போதைப்பொருள் கடத்தல் மன்னனான பாப்லோ எஸ்கோபரின் வரலாறு மிகவும் சுவாரசியமானது.பல் திருப்பங்களும் திடுக்கிடல்களும் நிறைந்தது.பா.ராகவன் எஸ்கோபரின் வாழ்க்கையை சாதாரணமாக எழுதியிருந்தாலே இந்நூல் மிகவும் சுவாரசியமானதாக அமைந்திருக்கும்.ஆனால் பாடி.ராவோ கதையை மேலும் சுவாரசியமாக்குகிறேன் பார் என்று இறங்கி பல இடங்களில் தேவையில்லாமல் புலம்பி கடுப்பேற்றுகிறார்.போதாக்குறைக்கு ஆங்காங்கே இலக்கணப் பிழைகளும் பொருட்பிழைகளும் தலைகாட்டி நாங்களும் இருக்கிறோம் என்கின்றன.எஸ்கோபரைப் பற்றி நிறையைத் தகவல்களை உள்ளடக்கியிருந்தாலும் பாடி.ராவினதும் கிழக்கு பதிப்பத்தாரினதும் அலட்சியத்தால் குறைப்பிரசவமான குழந்தையாக எம் கைகளில் தவழ்கின்றது "என் பெயர் எஸ்கோபர்"
It was a quick interesting read on the drug lord Escobar. After reading this, watching Narcos in Netflix is even more engaging. I know the limits of writing columns in Tamil weekly but this could be even more detailing in events. Escobar got introduced to a new territory which he could never imagine.