Jump to ratings and reviews
Rate this book
Rate this book
இந்தக்கதைகள் எல்லாமே என் இளமைநாட்களில் நிகழ்பவை. நிகழ்ந்தவையா என்றால் நிகழக்கூடியவை, நிகழ வாய்ப்பிருந்தவை, நிகழந்தவையும்கூட என்பேன். பெரும்பாலான படைப்பாளிகள் அவர்களின் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் தங்கள் இளமைக்கு திரும்பிச்செல்கிறார்கள். அங்கே எஞ்சும் நினைவுகளை கொண்டு ஓர் உலகைச் சமைக்கிறார்கள். புத்தம்புதிய ஓர் உலகு. ஒளிமிக்க உலகு. முதுமையில் அவர்கள் அங்கேதான் வாழ்கிறார்கள்.
என் இளமையைக்கொண்டு நான் சமைத்த இந்த உலகை இனியும் விரிவாக்குவேன் என நினைக்கிறேன். ஒருவேளை எழுதாமல் போகலாம். ஆனால் என்னுள் வளர்த்துக்கொள்வேன். இப்போதே எழுதப்படாத பல கதைகள் என்னுள் இருக்கின்றன. இவற்றிலுள்ள கள்ளமற்ற கொண்டாட்டமே இவ்வுலகில் நான் வேண்டுவது. இங்கே மானுடர் வாழவேண்டிய வகை அது.
- ஜெயமோகன்

349 pages, Kindle Edition

Published June 21, 2021

Loading...
Loading...

About the author

Jeyamohan

209 books872 followers
B. Jeyamohan (also credited as Jayamohan) is one of the most influential contemporary, Tamil and Malayalam writer and literary critic from Nagercoil in Kanyakumari District in the south Indian state of Tamil Nadu.

He entered the world of Tamil literature in the 1990s, Jeyamohan has had impacted the Tamil literary landscape as it emerged from the post-modern phase. His best-known and critically acclaimed work is Vishnupuram, a deeply layered fantasy set as a quest through various schools of Indian philosophy and mythology. His other well-known novels include Rubber, Pin Thodarum Nizhalin Kural, Kanyakumari, Kaadu, Pani Manithan, Eazhaam Ulagam, and Kotravai. His writing is heavily influenced by the works of humanitarian thinkers Leo Tolstoy and Mohandas Karamchand Gandhi. Drawing on the strength of his life experiences and extensive travel around India, Jeyamohan is able to re-examine and interpret the essence of India's rich literary and classical traditions.
---
தந்தை பெயர் எஸ்.பாகுலேயன் பிள்ளை. தாத்தா பெயர் வயக்கவீட்டு சங்கரப்பிள்ளை. பூர்வீக ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவரம்பு. தாத்தா அடிமுறை ஆசான். ஆகவே சங்கு ஆசான் என அழைக்கப்பட்டிருக்கிறார். அப்பாவின் அம்மா பெயர் லட்சுமிக்குட்டி அம்மா. அவரது சொந்த ஊர் குமரிமாவட்டம் விளவங்கோடு வட்டம், திருவட்டாறு. அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர். தம்பி எஸ்.சுதர்சனன் நாயர் தமிழக அரசுத்துறையில் வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்து ஓய்வுபெற்று இப்போது பத்மநாபபுரத்தில் வசிக்கிறார். அப்பாவின் தங்கை சரோஜினி அம்மா திருவட்டாறில் ஆதிகேசவ பெருமாள் ஆலய முகப்பில் உள்ள பாட்டியின் பூர்வீகவீட்டிலேயே வாழ்கிறார்.

அப்பா முதலில் வழங்கல் துறையில் வேலைபார்த்தார். பின் பத்திரப்பதிவுத்துறையில் எழுத்தராக வேலைபார்த்து ஓய்வு பெற்றார். அவரது பணிக்காலத்தில் பெரும்பகுதி அருமனை பத்திரப்பதிவு அலுவலகத்தில் கழிந்தது. 1984ல் தன் அறுபத்தி ஒன்றாம் வயதில் தற்கொலை செய்துகொண்டார்.

அம்மா பி. விசாலாட்சி அம்மா. அவரது அப்பாவின் சொந்த ஊர் நட்டாலம். அவர் பெயர் பரமேஸ்வரன் பிள்ளை. அம்மாவின் அம்மா பெயர் பத்மாவதி அம்மா. அவரது சொந்த ஊர் திருவிதாங்கோடு. நட்டாலம் கோயில் அருகே உள்ள காளி வளாகம் அம்மாவின் குடும்ப வீடு. அம்மாவுக்கு சகோதரர்கள் நால்வர். மூத்த அண்ணா வேலப்பன் நாயர், இரண்டாமவர் கேசவபிள்ளை. மூன்றாம் அண்ணா மாதவன் பிள்ளை. அடுத்து பிரபாகரன் நாயர். கடைசி தம்பி காளிப்பிள்ளை. அம்மாவுக்கு இரு சகோதரிகள். அக்கா தாட்சாயணி அம்மா இப்போது நட்டாலம் குடும்ப வீட்டில் வசிக்கிறார். இன்னொரு அக்கா மீனாட்சியம்மா கேரள மாநிலம் ஆரியநாட்டில் மணமாகிச்சென்று அங்கெ வாழ்ந்து இறந்தார். அம்மா 1984ல் தன் ஐம்பத்து நாலாம் வயதில் தற்கொலைசெ

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
27 (65%)
4 stars
11 (26%)
3 stars
2 (4%)
2 stars
1 (2%)
1 star
0 (0%)
Displaying 1 - 6 of 6 reviews
March 24, 2022
15 கதைகள் அடங்கிய இச்சிறுகதைத் தொகுப்பில் ஆனையில்லா, பாப்பாவின் சொந்த யானை, துளி, மொழி, இடம், மதுரம், செய்தி, வருக்கை, ஆமை, கணக்கு, வலம் இடம்  ஆகிய 11 சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. குறிப்பாக "ஆமை" "கணக்கு" ஆகிய இருகதைகளும் என்னை பெரிதும் பாதித்தது. அறம் சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை படிக்கும் போது ஒரு உள்ளெழுச்சி ஏற்படுமே, அதுபோன்ற ஒரு உணர்வை இந்த இருசிறுகதைகளும் எனக்கு அளித்தன.  என்னை பொருத்தமட்டில் எழுதப் படிக்க தெரிந்த அனைவரும் "ஆமை" "கணக்கு" ஆகிய இருசிறுகதைகளையும் கட்டாயம் படிக்க வேண்டும்.
29 reviews
March 17, 2026
நாட்டு சொலவடைகள் மற்றும் மொழியின் காரணமாக எவ்வளவு முயன்றும் என்னால் இப்புத்தகத்தை முழுதாக படித்து முடிக்க முடியவில்லை. என்னுடைய ரசனைக்கும் ஆர்வத்துக்கு ஏற்ற புத்தகமாக இது இல்லை. ஆனால் ஒரு விருந்தை எவ்வாறு உண்ண வேண்டும் என்பதை மூன்று முழு நீள பக்கங்களுக்கு ரசனையோடு விவரித்தது அருமை!! இசையோ, சமையலோ, ஆடலோ, பாடலோ- விசேஷங்களில் அவை அரங்கேறும் போது, மனது நிறைவுடன் அதை அனுபவித்தவர்கள் கொடுப்பது காலணா எனினும், அதை மரியாதையுடனும் பக்தியுடனும் பெற்றுக்கொள்ளும் சமையல் காரர் மூலம் அந்தக் காலத்தில் புழக்கத்தில் இருந்த அழகிய பண்பு, அறத்தை பதிவு செய்கிறார் படைப்பாளர்.
32 reviews
March 18, 2026
புனைவு விளையாட்டு கதைகளில் எனக்கு பிடித்த தொகுப்பு. கரடி நாயரும், அவரின் நண்பர்களும், அந்த ஊரும், வட்டார வழக்கும் அனைத்துமே மிகவும் பிடித்திருந்தது. முதல் கதை ஆனையில்லாவில் ஆரம்பித்து அனைத்து கதைகளுமே மிகவும் சிறப்பாக இருந்தது. சிறுத்தையை பூனையாய் நினைப்பது, குரங்கின் சேட்டைகள் என்று நகைச்சுவைக்கு பஞ்சமில்லை.
Profile Image for Gobinath.
34 reviews8 followers
May 14, 2022
ஜெ.மோவின் மற்றுமொரு நல்ல படைப்பு. ஆயினும் 'பத்து இலட்சம் காலடிகள்' அளவுக்கு மனதைக் கவரவில்லை.

'ஆணையில்லா' 'சொட்டு' கதைகள் நன்று. 'இடம்' எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் வாய்விட்டு சிரிக்கவைத்த கதை.
77 reviews
February 27, 2025
Compilation of short stories... simple and day to day incidents evoking emotional outflow and impact. Understanding the dialect takes bit of an effort. Good read 👌
Displaying 1 - 6 of 6 reviews