Jump to ratings and reviews
Rate this book

தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்

Rate this book
“ராணுவத்தில் சேருவதற்காக வர்ஸாவுக்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறிய அளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறிய அளவிலான தோல் பை ஒன்றும் இருந்தன” என்று தொடங்கும் ஒரு தமிழ்க் கதையை நாம் மொழிபெயர்ப்புக் கதை என்றுதானே நினைப்போம்? இல்லை. சாதனாவின் கதைகள் யாவும் நாம் இதுகாறும் பழகியிருந்த நிலங்களிலிருந்து விலகி இந்தப் பூமிக் கோளத்தில் நம்மைப் போலவே சிரித்து நம்மைப் போலவே கண்ணீர் விட்டு நம்மைப் போலவே துரோகம் செய்து நம்மைப் போலவே கொலைகள் செய்து நம்மைப் போலவே புணர்ந்து நம்மைப் போலவே சுரண்டப்பட்டு வாழும் வேற்று நில மனிதர்களின் கதைகளைச் சொல்கின்றன. இதுதான் இந்தக் கதைகளின் விசேஷம். இதுதான் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது. சாதனாவை கவனிக்கவும் வைத்தது.

இது போன்ற கதைகள் இன்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை. இந்தக் கதைகள் ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டால் சாதனாவை உலகம் கொண்டாடும். அந்த இளைஞனுக்கு என் வாழ்த்துக்களும் அன்பும்.

- சாரு நிவேதிதா

134 pages, Kindle Edition

Published November 11, 2018

3 people are currently reading
19 people want to read

About the author

Sadhana

9 books1 follower

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
9 (25%)
4 stars
17 (48%)
3 stars
7 (20%)
2 stars
1 (2%)
1 star
1 (2%)
Displaying 1 - 11 of 11 reviews
Profile Image for Divakar T Lingam.
11 reviews2 followers
March 29, 2020
தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள். தனிப்பட்ட உணர்வின் படி ஒரு அடிப்படை வாசகனாக ஏழு சிறுகதைகளில் ஒரு சில கதைகளின் அனுபவத்தை முழுதாக உணரமுடியவில்லை என்றாலும். தொடர்ந்து வாசித்து கொண்டிருக்கும் பொழுது அங்கங்கே சில இடங்களில் விட்ட இடத்தில் நிறுத்திவிட்டு ஒரு இரண்டு நிமிடம் ஏதோ ஒரு சிந்தனைக்குள் நம்மை புதைக்கிறது அந்த எழுத்து. குறிப்பாக, யூதஸின் முத்தம் என்ற கடைசி கதையில்,

"உண்மையில் தனிமையென்பது மரணமென்பதை அவன் உணர்ந்திருந்தான். தனித்திருக்கும்போது அவன் தானொரு சவப்பெட்டிக்குள் மூடப்பட்டிருப்பதாகவே நினைத்துக்கொள்வான். யாருமற்ற அந்த சாமமும், கொறித்துக்கொண்டிருக்கும் எலிகளின் வாடையும் அவனை உண்மையிலேயே ஒரு சவம் போலாக்கியது."

இது போன்ற வரியை குறிப்பாக. இந்த மொத்த தொகுப்பிலும் சாதனா தேர்ந்தெடுத்திருக்கும் உவமைகளை எல்லாம் தமிழ் இலக்கியத்தில் வாசிக்க புதிதாக இருந்தது.

"தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்." - சாதனா
Profile Image for இரா  ஏழுமலை .
143 reviews8 followers
April 13, 2023
“மரணம்தான் எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருக்கிறது. இன்பம், துன்பம், காதல், காமம், கோபம், அன்பு, அபூரணம், புண்ணியம் இவையெல்லாமே மரணத்தை நோக்கித்தான் நம்மை இழுத்துச் செல்கின்றன. வாழ்க்கையென்பது வெறும் பயணம் மட்டுமே. இப்பயணத்தின் முடிவுதான் மரணம். தெரிந்தோ, தெரியாமலோ நாமெல்லோரும் மரணத்தை நோக்கிப் பிரயாணம் செய்யும் பிரயாணிகளாய் இருக்கின்றோம்.”

மரணம்தான் ஒவ்வொரு உயிருக்கும் ஆதாரமாக விளங்குகிறது ஒன்றின் மரணமே இன்னொன்றை பிரசவிக்கிறது மரணம் இல்லை என்றால் புதிய ஜனனம் இங்கே நிகழும் போவதில்லை . ஒவ்வொரு கலவியும் ஒரு மரணம் என்கிறார்கள் ,தனிமை கூட ஒரு சிறிய மரணம் என்கிறார்கள் .ஒரு உயிரின் மரணம் இன்னொரு உயிரின் வாழ்வாதாரமாக இருக்கிறது வாழ்க்கை சுழற்சியில் மரணம் மட்டுமே எஞ்சி நிற்கிறது மரணம் மட்டுமே உண்மை , மீதி அனைத்தும் போலியானவையாக ஆகிவிடுகிறது இந்த மனித வாழ்க்கை அனைத்திற்கும் அடிப்படை ஆனது மரணம் மட்டுமே மரணத்தை இதுவரை விரிவாக எழுதியவர்கள் தமிழில் எஸ் சம்பத்தை தவிர வேறு யாரும் அல்ல .சாதனா இந்த சிறுகதைகளில் மரணத்தையே மையமாகக் கொண்டு எழுதி இருக்கிறார். மரணமே வாழ்க்கையை கொண்டாட்டமாகவும் மாற்றுகிறது. ஒருவரின் மரணம் இன்னொருவரின் வாழ்க்கையை பின்தொடர்கிறதா ? என்று கேள்வியும் நமக்கு எழுகிறது சிலோனாதன் ஏன் நத்தையை எடுத்து வளர்க்கிறான் கதையின் இறுதி ஒரு அற்புதமான இடம்..இதான் அது

" நான் நிதானமிழந்து குறிப்புப் புத்தகத்தை படாரென்று மூடியபோது என் கால்களுக்குக் கீழாக நத்தையொன்று ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு “ஆ”வென்று வீறிட்டுக் கத்தினேன்.""

தொலைந்து போன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள் என்று சிறுகதையின் இறுதி மிக அற்புதமான இடம் இதுவரை தமிழில் எழுதப்படாத ஒரு முயற்சி. மனிதனிடம் அதிகாரம் குவியும் போது குற்றத்திற்கான ஊற்று அவனிடத்திலிருந்து பிறக்க தொடங்கி விடுகிறது. இதனாலேயே மனிதர்களை லார்ட் பைரன் கூட "மனிதன் அதிகாரத்தால் சீரழிந்தவன்" என்கிறார் .


‘மானிடனே, அதிகாரம் உன் தேகத்தில் மலைப்பாம்பினைப் போல் ஊர்ந்து கொண்டிருக்கின்றது. மமதையும், அகங்காரமும் உன்னை மாற்றி விட்டது. உன் தேகத் துவாரங்களிலிருந்து வியர்வைத் துளிகளைப் போல் விஷம் வெளியேறிக் கொண்டிருக்கிறது. நீ உன்னை மறந்து விட்டாய், உனக்குள் இன்னொருவன் குடியேறி விட்டான்.’

கடைசி கதையான யூதாஸின் முத்தம்

உலகம் முழுவதுமே நல்லவர்களையும் ஹீரோக்களையும் மட்டுமே எழுதுகிறார்கள் முன்னிலைப்படுத்துகிறார்கள் துரோகிகளை பற்றி யாருமே எழுதுவதில்லை அதற்கான குறிப்புகள் எங்கேயும் கிடைக்கப்படுவதில்லை. இந்த கடைசி கதை துரோகி யூதாஸ் பற்றியது .

சாதனா ஆனா பெண்ணா என்று கூட எனக்கு தெரியாது ஆனால் சாதனாவின் கதைகள் தமிழில் இதுவரை எழுதப்பட்டதிலேயே வேறுபட்ட கதைகள். சொல்லும் முறையையும் விதமும் வேறுபட்டவை. கதை கலங்களம் வேறுபட்டவை கதை கரு வேறுபட்டவை.
Profile Image for Napoleon.
6 reviews4 followers
August 22, 2019
"அற்புதம்"

வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை - மிகவும் அற்புதமான தொகுப்பு...
இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளை வாசிக்கும் போதும், எழுத்தாளரின் முதல் படைப்பு போலவே தோன்றவில்லை.
ஒவ்வொரு கதையும், அதன் கதைக்களமும் வாசிப்பவர்களுக்கு நிச்சயமாக ஒரு புது (வாசிப்பு)அனுபவத்தை தரும் என்பதில் ஆச்சரியமில்லை.
Profile Image for Sivasankaran.
60 reviews8 followers
November 8, 2021
தொலைந்துபோன சிறிய அளவிலான
கறுப்பு நிற பைபிள்
எழுத்து பிரசுரம்
சாதனா

இப்புத்தகத்திற்கான சாரு நிவேதிதாவின் முன்னுரையை படிக்க நேர்ந்த்தன் மூலம் இதனை வாங்கி படித்தேன். உண்மையில், சாரு நிவேதிதா கண்ணில் பட்டு, அவர் குறிப்பிட்டு கூறும் அனைத்து படைப்புகளும் நான் இதுவரை கண்டிராத களமாக தானிருக்கிறது.

முடிந்தால் சாரு அவர்களின் 'ஊரின் மிக அழகான பெண்' என்னும் மொழிபெயர்ப்பு கதைகளை வாங்கி பாருங்கள். இத்தொகுப்பில், இன்னும் இரண்டு கதைகள் மட்டுமே உள்ளது. நான் படித்த வரையில் இவரால் மொழியாக்கம் செய்யப்பட்ட கதைகள் அசாதாரணமானவை. என்னை மனதளவில் மிகவும் பாதித்து விட்டது. இதனை பற்றி பிறகு பேசுவோம்.

இந்த பைபிள் சிறுகதை தொகுப்பிற்கு வருகிறேன். இதில் வரும் ஏழு கதைகளும் தனித்துவமானவை. தமிழில் யாரும் படித்திராத களம், அக்களத்தில் மனிதனின் வெளிப்படைத்தன்மை வெளிப்பட்டு சிதறுண்டு கிடக்கிறது.

குறிப்பாக, இராணுவத்தில் பணிபுரிபவனை பற்றியான இரு கதைகளும் நுணக்கமாக எழுதப்பட்டிருக்கிறது.
முதலில், சிறுமி கத்தலொனா கதை - மரணத்துக்கும், காமத்துக்குமான பரவசமான ஒற்றுமையை நாம் படிக்கையில் உணர முடியும். மரணம், தற்கொலை, வதை என திரியும் கதாபாத்திரத்திற்கு ஒரு பெண்ணின் நிர்வாண உடல் முன்பு நடக்கும் நிகழ்வுகள் ஆழமாக யோசிக்க வைக்கவும் செய்கிறது; அதே தருணம், Pleasureableஆகவும் இருக்கிறது. இது எனக்கு Stanley kubrick இன் "A clockwork orange" என்னும் திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியினை நினைவுப்படுத்தியது.
இன்னொரு கதை, பைபிள் கதை - இக்கதையின் முடிவு என்னை ஒரு விடயத்தில் இன்னமும் இது இப்படியென என்ற உறிதியை தந்தது. அதிகாரம் - மலைப் பாம்பினை போல மனிதனின் மூளையை அப்படியே மெதுவாக, பின், முழுதாக விழுங்கி மனிதத்தை சக்கையாக்கி மிருகத்தை மட்டும் மிச்சம் வைக்கும் என்பதில் ஐயமில்லை. இக்கதையும் அப்படித்தான், கலவியிலும் சரி, கொலையிலும் சரி, முதலில் சிறு தயக்கம் கொண்டாலும் மனித மனம் அதற்கு பழகத் தான் செய்கிறது.
"நாவலின் பிரதான கருத்தாக்கம் நேரியதான நல்லவனைப் படைப்பதே. உலகத்தில் வேறெதுவும் அவ்வளவு சிரமமானதல்ல. குறிப்பாக, தற்போதைய காலகட்டத்தில், நேரிய நல்லவனைப் படைக்கு முயன்ற எல்லா எழுத்தாளர்களும் மட்டுமல்லாது ஐரோப்பிய எழுத்தாளர்களும் எல்லாத் தடவைகளிலும் தோற்றுப் போயினர். அது ஒரு வரம்பற்ற காரியம்." என இக்கதையின் கதாபாத்திரத்தை இன்னும் தெளிவுபடுத்தும் விதமாக எழுதப்பட்டிருக்கும் இந்த வரிகள் உண்மையில் நாவல் கட்டமைப்புக்கே பெரிதாய் ஒன்றை சேர்ப்பதாய் தோன்றுகிறது.

இன்னும் சில்கதைகளில், கதை சொல்லப்படும் உத்தி என்னை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக, தாவீது ராஜா கதை - பிரமிக்க வைக்கிறது. அதில், தனிமையின் வலியை காட்டிலும் இதிலிருந்து நழுவிப் போக முற்படும் ஒருவனின் மனப்போராட்டங்கள் மனதளவில் சற்று அச்சத்தை தான் கொடுக்கிறது. இது நிஜமா? பேசுகிறானா? அது பேசுவது மெய்யா? அல்லது இவன் தான் நாமோ? என்று கூட நினைக்க வாய்ப்புண்டு. ராஜாவாகும் தாவீது என படிக்கும் போது முரண்பாடான பல விடயங்கள் உறுத்தலாக படுகிறது. இங்கும் மரணம் பற்றியான உரையாடல் வேறொரு விதத்தில் கையாளப்பட்டிருக்கிறது.

மிக முக்கியமாக, இச்சிறுகதை தொகுப்பில் உள்ள ஏழு கதைகளையும் படிக்கும் போது, மனதில் Visualization மற்றும் Ecstasyக்கு துளியும் பஞ்சமில்லை. இவரின் எழுத்து நடை அவ்வளவு தெளிவு மிக்க ஒன்று; கூடவே, வாசகர்களை கற்பனைக்கு கொண்டு சென்று உணர வைக்கையில் கதைகள் வேறொரு உச்ச நிலைக்கு செல்கிறது.

இவர் தஸ்தயேவ்ஸ்கியின் தீவிர வாசகராக இருக்க வேண்டும். அதனால் தான், என்னால் நிறைய இடங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு தஸ்தயேவ்ஸ்கியின் வாசகனின் மனநிலையை உணரமுடிகிறது.

அவசியம் வாசிக்க வேண்டிய சிறுகதை கொகுப்பு.
Profile Image for Satheeshwaran.
73 reviews222 followers
September 16, 2019
'தொலைந்துபோன சிறிய அளவிலான கருப்பு நிற பைபிள்' பற்றிய பதிவு:

அருமையான, Philosophical-ஆன 6 சிறுகதைகளின் தொகுப்பு. அதில 3 கதைகளைப் பத்தி பேசியிருக்கேன்.

youtu.be/yBvq5VBsIVQ

So விடியோ கொஞ்சம் நீளம் தான். முழுமையா கேட்டுப்பாருங்க. உங்களுக்கு பிடிக்கலாம்.

நன்றி!
Profile Image for Ramakrishnan.
7 reviews1 follower
November 5, 2020
நான் நிதானமிழந்து குறிப்புப் புத்தகத்தை படாரென்று மூடியபோது என் கால்களுக்குக் கீழாக நத்தையொன்று ஊர்ந்து கொண்டிருப்பதைக் கண்டு "ஆ" என்று வீறிட்டுக்கத்தினேன்
24 reviews4 followers
September 26, 2020
Grear short story collection

This book contains seven wonderful short stories. It initially looks like translated stories. But the stories characters, location and narrative style are new to tamizh.
1 review
August 11, 2023
An Eropian Story written in Tamil, a Great Yudhas story.
10 reviews
March 6, 2022
இந்த புத்தகத்தில் எனக்கு இரண்டு கதைகள் மிகவும் பிடித்திருந்தது 1 தாய் இன்னொன்று யூதாசின் தாய்க்கு அதன் மூலமாக ஒருவிதமான அமைதி நிகழ்ந்தது யூதாசின் முத்தம் கதை மூலமாக இயேசுவுக்கு நிகராக Judas சை நேசிக்கிறான் ஆனால் இந்தப் புத்தகத்தின் தலைப்பு மூலமாக நான் மிகவும் எதிர்பார்த்தேன் யூதாஸின் முத்தம் கதை மட்டும் படிக்காமல் இருந்திருந்தால் இந்தப் புத்தகத்திற்குஒரு மதிப்பெண்கள் மட்டுமே கொடுத்து இருப்பேன் யூதாசின் முத்தம்தினால் மட்டுமே இதற்கு நான்கு மதிப்பெண்களை கொடுத்திருக்கிறேன்
28 reviews3 followers
June 30, 2020
Out of the seven short stories I liked "Tholainthu pona siriya alavilana karuppu nira Bible "and "Yuthasin Mutham " the best. Though it's not an entertaining read it definitely is an contemplating one . Good work Mr Sadhana.
Displaying 1 - 11 of 11 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.