Jump to ratings and reviews
Rate this book

கொசு / Kosu

Rate this book
‘ஒண்ணு சொல்றேன். எந்த அரசியல்வாதியும் சனங்க நல்லாருக்கணும்னு நெனச்சி வேல செய்யறதில்ல. இருவதாம் நூற்றாண்டு நடுவுலேருந்து ஒலக தருமம் மாறிடுச்சி முத்துராமா. தான் நல்லா இருக்கணும். தின்னுட்டு ஏப்பம் வந்தப்பறம் கையில மிச்சம் இருக்கற பொறையில கொஞ்சம் கிள்ளிப்போடுறது. தின்னது தெரி-யாம, போட்டது மட்டும் தெரியற-மாதிரி நடந்துக்கறது. இது மக்களுக்கும் பழகிருச்சி... அவங்க கேள்வி கேக்கறதில்லடா.. கேக்கலைன்னா கிடைக்காதுன்னு இன்னொரு தருமம் இருக்குது. அது ஏசுநாதர் காலத்துலேருந்து இருக்கற தருமம். தெரியும்ல?’

முத்துராமன் சிரித்தான். இதுதான் சந்தர்ப்பமா?

‘தப்பா எடுத்துக்காதிங்கண்ணே. நான் இப்பம் கேக்கறேன். என்னிய ஒரு கவுன்சிலராக்குவிங்களா?’

இந்நாவலில் ச

235 pages, Kindle Edition

First published May 27, 2013

5 people are currently reading
15 people want to read

About the author

Pa Raghavan

122 books285 followers
Raghavan was born in Adyar, Chennai and spent his early years in many villages of Chengalpet District because of the frequent transfers of his father in his job. In the mid-1980s, his family shifted and settled in Chennai where Raghavanfinished his school and college studies in 1988. Even though he has completed a course in Mechanical Engineering, he did not want to take a job in a factory because of the interest in writing. Raghavan started his career as a sub-editor in Amudhasurabi Monthly Magazine. The famous weekly magazine kalki offered him the post Assistant Editor in 1992 after he showed his talent in humorous articles and stories.

Raghavan worked as an assistant editor in Kalki for about 8 years and joined in kumudam the No.1. Tamil weekly magazine in 2000. After completing a full year in Kumudam as Assistant Editor, he was appointed as the Editor in Charge for then newly started by monthly Kumudam Junction.

Raghavan left the magazine industry and became involved in publishing in 2003 and presently leading the Tamil Division (‘'Kizhakku Pathippagam'’) of New Horizon Media Private Limited.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
5 (21%)
4 stars
8 (34%)
3 stars
7 (30%)
2 stars
3 (13%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Prem.
77 reviews52 followers
February 12, 2016
பா. ராகவன் அவர்களின் எழுத்தில் நான் வாசிக்கும் மூன்றாவது புத்தகம். கொசு என்று ஒரு வித்தியாசமான பெயர். அந்தப் பெயரின் காரணம் பல இடங்களில் பல சந்தர்பங்களில் வருகிறது பொருத்தமாகவே உள்ளது. திராவிட அரசியல் தரை டிக்கெட் நாவல் என்ற tagline-ம் அது போலவே. கதை தற்காலத்தில் ஒரு குப்பத்தில் வாழும் அரசியலில் ஆர்வம் கொண்ட கடைநிலைத் தொண்டனைப் பற்றியது. இரண்டு தலைமுறைகளாக அரசியலில் தோல்வி அடைந்த குடும்பத்தில் வந்த முத்துகுமாரனுக்கு அரசியலிலும் வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வாய்ப்பு கிடைகின்றது. ஒன்று அவன் சார்ந்த கட்சியின் வட்ட செயலாளர் மூலம். மற்றொன்று திருமண நிச்சயம் மூலம் சாந்தி என்ற பெண்ணுடனான உறவு. இந்த இரண்டில் எது கைகூடியது, அவன் சந்திக்கும் தடைகற்கள் என்ன என்பதை விறுவிறுப்பாக பாரா எழுதியுள்ளார். கடைசி அத்தியாயங்களில் கதை செல்லும் பாதை புரிந்து கொள்ளும்படியாக இருந்தாலும் நாயகன் மேல் பரிதாபம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. பாராவின் எழுத்து நடை நன்றாக உள்ளது. கடை மாந்தர்கள் சென்னை குப்பத்து பாஷை பேசுவதும், கதை விவரணை சாதாரண தமிழிலும், கொஞ்சமே கொஞ்சம் நெல்லைத் தமிழும் உறுத்தாமல் வந்து செல்கின்றன. கதையின் முதல் அத்தியாத்தில் வரும் சில கதாபாத்திரங்கள் பின்னால் எங்கும் வரக்காணோம். பாரா அவர் வலைப்பதிவில் (http://www.writerpara.com/paper/?p=1713) குறிப்பிட்டது போல ஒரு பெரிய நாவலின் மிச்சமாகவே அந்த காணாமல் போன கதாபாத்திரங்கள் உள்ளன என கருதுகிறேன். இலகுவான கதையோட்டம், சம கால அரசியல் அதன் கோர முகத்தை எளிமையாக எழுதியுள்ளார். அவரது மற்ற புத்தகங்களை வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் புத்தகம்.
Author 2 books16 followers
February 22, 2023
இந்த காலத்தின் மிக பெரிய கலாச்சார flex என்பது தான் நடுநிலை என்பதை நிலைநிறுத்துவது முயல்வது தான் . வாழ்க்கையிலும் சரி , விவாதத்திலும் சரி நடுநிலை என்பதே கிடையாது என்பது தான் உண்மை . அப்படி நடுநிலையாக இருக்க முயற்சிப்போர் இரண்டிலும் தோல்வியை அல்லது வருத்தத்தையே பரிசாக பெறுவார்கள் என்பது என் தனிப்பட்ட அனுபவம் , மக்களின் பொதுவான அனுமானம் . எழுத்து ஒன்றில் மட்டும் தான் நாம் நம்முடைய நடுநிலைமையை தாராளமாக காட்டமுடியும் . ஏனென்றால் படைப்பில் காட்டும் நடுநிலைமட்டும் தான் பெரிதாக யாராலும் கேள்விகேட்க முடியாது . அப்படிப்பட்ட எழுத்துலகில் நடுநிலையை எளிதாக தேர்ந்தெடுத்திருக்க கூடிய ஒரு வசதி இருந்த போதும் அதை பா.ரா என் தவிர்த்திருக்கிறார் என்பது புரியவில்லை . கதாநாயகன் முத்துக்குமார் அரசியில் குடும்பத்திலிருந்து வந்து அரசியலில் தன் தடம் பாதிக்க செய்யும் வேலைகளும் , அதனால் அவன் சந்திக்கும் பிரெச்சனைகளே "கொசு " நாவலின் கதை சுருக்கம் . நாவலின் அட்டைப்பக்கத்தில் திராவிட அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தின் பின்னணியில் விரியும் நாவல் என்பது என்ன காரணத்திற்காக என்று தெரியவில்லை . அனுதாப அரசியல் , பொதுச்சேவை அரசியல் , துரோக அரசியல் , தந்திர அரசியல் எல்லாம் திராவிட இயக்கங்கள் தான் தமிழகத்திற்கு கொண்டு வந்தது போலொரு பிம்பத்தை இந்த நாவல் கட்டமைக்க முயல்கிறது . உலகில் உள்ள 99சதவீத காட்சிகள் செய்யும் ஒன்றை தான் திராவிட இயக்கங்கள் கட்சியின் வளர்ச்சியை காரணம் கட்டி செய்கிறது . இதற்காக அவர்கள் உத்தமர்கள் என்று நான் சொல்லவரவில்லை , ஆனால் எல்லா பழியையும் திராவிட இயக்கங்கள் மேல் போடுவது என்பது நியாயமான செயலாக இருக்காது . கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவது போல் " எல்லாத்தையும் என்னையவே பாத்துக்க சொல்லாதீங்க , கிழ ஒருத்தன் இருக்கான் அவனுக்கும் கொஞ்சம் கொடுங்க " என்பது போல் பிரித்து கொடுப்பது உசிதம் . நாவலை ஒரு இடத்தில் கூட தேங்கவிடாமல் எழுதுவது என்பது பா.ரா தூக்கத்தில் கூட செய்யும் விசயம் என்பது அனைவரும் அறிந்ததே . ஒருவேளை திராவிட இயக்கத்தினரையும் புத்தகத்தை படிக்க வைக்க பா.ரா வின் தந்திரமாக கூட அந்த முகவுரை இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் . அவர் தந்திரம் வெற்றியடைந்ததுக்கு நானும் என் விமர்சனமும் தான் சாட்சி .
Profile Image for Aravinthan ID.
145 reviews17 followers
July 14, 2017
பரம்பரை பரம்பரையாய் கட்சியில் தொண்டனாகவே வாழ்ந்து முடிகின்ற குடும்பத்திலிருந்து ஒருவன் தீவிரமாய் கட்சிப் பணியாற்றிக் கொண்டு, அரசியலில் சற்றே மேல உயர்வதற்கான காய்களை நகர்த்துகின்றான். சாதரண தொண்டனின் சிறிய வளர்ச்சியைக் கூட பொறுத்துக்கொள்ளத அரசியல்வாதிகள் அவனுக்கு எவ்வாறெல்லாம் 'செக்' வைக்கிறார்கள் என்பதே கதை. நாவலின் முதல் பாதி சற்று மெதுவாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்புடனும் எதிர்பாரத முடிவுடன் நிறைவுறுகிறது. அரசியல்வாதிகளின் சுயரூபத்தை அப்படியே படம் பிடித்துள்ளார் பா. ராகவன்.

பல்வெறு formatகளில் இந்நூலை இலவசமாகப் படிக்க: http://freetamilebooks.com/ebooks/kos...
4 reviews
February 26, 2020
Good

Good read. Real life of a political worker portrayed in a fluid simple language. Crisp narrative. Brings the situation on hand before one's eyes
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.