Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
It is so close to a real life. Even for a reader who doesn't know anything about music and musicians, this story etched the pain of the unsung song in my heart and mind.
ஃபேஸ்புக்கில் நான் பின்தொடரும் ஒரு எழுத்தாளர் , திரு. யுவன் சந்திரசேகரனின் நாவல்களைப்பற்றி மிகுந்த பாராட்டுகளுடன் எழுதியிருந்தார். அதனால் தான் இந்த புத்தகத்தை எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அவர் எழுதி நான் வாசிக்கும் முதல் நாவல் இதுவே.
ஹிந்துஸ்தானி இசைக்கலைஞரின் வாழ்க்கையை மையமாக கொண்டு தமிழில் எழுதப்பட்டிருக்கும் சில நாவல்களில் இதுவும் ஒன்று. இந்தக் கதையின் நாயகன் தனஞ்செய் முகர்ஜி, வங்காளத்தின் மாமுட்பூர் என்ற சிறிய கிராமத்தில் மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்தவர். சிறு வயதிலேயே வெளிப்பட்ட அவரது அசாதாரண சங்கீதத் திறமையை கண்டு, தந்தை அவரை ஊரின் சங்கீத வித்வான் கிரிதர்பாபுவிடம் பயிற்சிக்கு அனுப்புகிறார்.
குருவின் வழிகாட்டுதலில் தனாவின் திறமை துளித் துளியாக வளரும் விதமும், அவர் கச்சேரிகளில் புகழ் பெற தொடங்கும் தருணங்களும் மிக நயமாக எழுதப்பட்டுள்ளன. அவருக்கு ஆதரவாக கைகொடுக்கும் செல்வந்த இசை ரசிகர் மற்றும் தபலா கலைஞர் குருசரண்தாஸ்– அவர்களின் நட்பு கதையின் முக்கியமான தலையங்கமாகவே நிற்கிறது.
தனாவின் வாழ்க்கையில் வரும் சரயு என்ற பெண்ணைப் பற்றிய நிகழ்வும் நாவலின் முக்கிய திருப்புமுனையாக உள்ளது. நிலையான வருமானமில்லாத இசைக்கலைஞரை மாப்பிள்ளையாக ஏற்க மறுக்கும் சமூக மனநிலை, அந்த ஏமாற்றத்தால் தனாவின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஏற்பட்ட சரிவுகள்– குறிப்பாக குடிப்பழக்கம் அவரை எப்படி படுகுழிக்குள் தள்ளுகிறது என்பதையும் ஆசிரியர் மிக நுணுக்கமாக சித்தரித்துள்ளார்.
கதை பல இடங்களில் நமக்குத் தெரிந்த நிஜக் கலைஞர்களின் வாழ்க்கையை நினைவூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. கதை காலம் கல்யாணப்பரிசு திரைப்படம் நினைவுக்கு வரும் பழைய பாணியில் இருந்தாலும், சொல்லப்பட்ட விதம் மிகவும் சுவாரஸ்யமானதும் புதுமையானதுமாக இருக்கிறது. ஆரம்பத்தில் தனஞ்செய்யின் வாழ்க்கையைப் பதிவு செய்ய முயலும் ஒருவர் எழுதியது போன்ற முன்னுரையுடன் தொடங்குவது ஒரு தனிச்சிறப்பு.
நாவலில் வரும் பல கதாபாத்திரங்கள் மனதில் நீங்காத இடம்பிடிக்கின்றன – தனாவை தன் பிள்ளைபோல் நேசிக்கும் குழந்தையில்லாத மித்தாலி அத்தை, எதற்கும் “ஆமாம்” என்று பின்பாட்டு பாடும் மைனாவதி பாட்டி, சூழ்நிலையின் கைதியான தங்கை அபர்ணா, பிரதிபலன் பாராமல் சங்கீதத்தையும் வாழ்க்கைப் பாடத்தையும் கற்றுத்தரும் கிரிதர்பாபு, தனாவின் கடைசி நாட்களில் தங்குமிடம் கொடுக்கும் அஸ்லாம், முகத்திலடிக்கும் உண்மையைப் போல நேராகப் பேசும் சலாவுதீன்.. இந்தக் கதாபாத்திரங்கள் அனைத்தும் நாவலின் உலகை உயிர்ப்புடன் நிறைக்கின்றன.
மொழியின் ஓட்டமும் விவரிப்பின் இனிமையும், கங்கை ஓடும் வேகத்துடன் கதையை முன்னே கொண்டு செல்கின்றன. ஹிந்துஸ்தானி இசை, ராகங்கள், கரானா, பாடும் பாணிகள்— இவையெல்லாம் கதையின் ஓட்டத்தில் மிகையல்லாமல் சொல்லப்படுகிறது.
புத்தகம் முடியும் போது, “ஒரு ஏமாற்றத்துக்காக இத்தனை அரிய சங்கீதத் திறமையை வீணாக்கிவிட்டானே…” என்ற வருத்தம் உள்ளத்தில் ஒரு கையறு நிலையை கொண்டுவருகிறது. அந்த உணர்வை வாசகரிடம் கொண்டு சேர்த்ததே ஆசிரியரின் மிகப்பெரிய வெற்றி.
சங்கீத ரசனை உள்ள எனக்கு, இந்த நாவல் ஒரு தலைவாழை விருந்து. உண்மையிலேயே மனம் நிறைந்த வாசிப்பு அனுபவம்.
A novel that celebrates Hindustani music through the eyes of the protagonist dhananjoy. A very deep character study that delves deep into the psych of Hindustani performers of a certain age who were in constant tussle between tradition and modernity. But because of the fictional nature the predictable representation of female characters let's this novel down a bit I feel. Also can this be called coming of age?
Yuvan writes a combination of kamal is Vazhave Mayam, With a poetic genius as hero who ends up as a drunken man, writer lost his way or he likes being sadist