பிரிட்டிஷ் காலத்துக்கு முன்பிருந்தே, தூத்தூக்குடி ஹார்பர் பகுதிகளில் மிகப் பெரியளவில் கடல் வணிகம் செய்துவரும் பர்லாந்து குடும்பத்தின் வாரிசுகளான பெரியவர் ஜோசப் பர்லாந்து, சின்னவர் டேவிட் பர்லாந்து ஆகிய இருவரின் அதிகார யுத்தம்தான் 'வேட்டை நாய்கள்' தொடரின் கதைக்களம்.
தூத்துக்குடி துறைமுகம் யாருக்கு என்ற பர்லாந்து சகோதரர்களுக்கு இடையோன அதிகார போட்டியில் இருவரின் அணியை சேர்ந்த பலர் வேட்டையாடப்படுகின்றனர். இந்த வேட்டையில் பெரிய பர்லாந்தின் வேட்டை நாய் சமுத்திரம், சின்ன பர்லாந்தின் வேட்டை நாய் கொடிமரம். யார் இந்த பர்லாந்து சகோதர்ர்கள், யார் இந்த வேட்டை நாய்கள், இவர்களிடையான பகை, பாசம், அதிகாரப் போட்டி என கதை விரிவடைந்து விறுவிறுப்பாகிறது இறுதியில் எந்த வேட்டை நாய் தனது எஜமானுக்கு அதிகாரத்தை கைபற்றி கொடுத்தது என்பதே வேட்டை நாய்கள் பாகம்1 ன் கதை. -கலைச்செல்வன்
“பகையும் ஆயுதமும் என்றும் சாகாது. அவை வேறொருவனுக்குக் கைமாறும்!”
தூத்துக்குடி ஹார்பர் யாரு கைக்கு போகுது, அந்த கதையோட சுவாரசியமே. பகை இருக்குற வரை வெட்டு குத்து நடந்துகிட்டே இருக்கும். பெரிய பரலந்தும் சின்ன பரலந்துக்கும் நடக்குற போட்டியில அவர் அவர் ஆட்கள் வெட்டி கொல்லப்படுறாங்க. அந்த உப்பளத்து சுவாசம் இரத்தமும் பகையும் ஒரு த்ரில்லர் மூவி பாக்குற ஃபீல் வரும்.
டைட்டிலைப் பார்த்ததும் எங்க ஊரு நாய் தான் ஞாபகம் வந்துச்சு. அதுக்கு காரணம் இருக்கு, ஏன்னா ராஜபாளையத்துக்குப் புகழ் பெற்ற ஒன்னு அது எங்க ஊரு வெரைட்டி நாய் தான். இதோட ப்ளர்ப் (Blurb) படிச்சிட்டு தான் வாங்குனேன். அதுதான் என்னை வெகுவா கவர்ந்துச்சு. இதோட அடுத்த பார்ட்டும் படிச்சிட்டேன், இன்னும் பேலன்ஸ் இருக்கு, அதுவும் படிச்சிட்டா ஒரு ஃபுல்ஃபில்மென்ட் வரும். பிகாஸ் எனக்கு பொதுவாவே த்ரில்லர் பிடிக்கும்.
எழுத்து நடை தான் என்னை ரொம்ப கவர்ந்துச்சு. அந்த லோக்கல் டைலக்ட் (வட்டார வழக்கு) அப்புறம் ஒவ்வொரு சேப்டரோட (அத்தியாயம்) ஸ்டார்டிங்ல வர்ற மூர்க்கர்களோட அந்த கோட் (Quote) தான் ஹைலைட். 4 மணி நேரத்துல படிக்க வேண்டியதை நான் கொஞ்சம் கொஞ்சமா படிச்சேன். ரொம்ப நாள் ஆச்சு இப்படி ஒரு த்ரில்லர் படிச்சு. டெஃபனட்டா இவரோட அடுத்த புக் வாங்கணும். இது ஒரு வகையான த்ரில்லர், ஆனா நிறைய பிளட் சீன்ஸ் (இரத்தக் காட்சிகள்) இருக்கும், கொஞ்சம் குரூரமா தான் இருக்கும். உங்களுக்கு இந்த மாதிரி பிடிக்கும்னா போய் இந்த புக் வாங்கி படிங்க.
வேட்டை நாய்கள் - உப்பு மனிதர்களின் பகையும் கதையும்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுவீச்சில் வாசித்து முடித்தப் புத்தகமிது. பக்கங்களைப் புரட்டப் புரட்ட சுவாரசியம் குன்றாமல், நம்மை தூத்துக்குடி துறைமுகம, உப்பளங்களுக்குள் இழுத்துச் சென்று அங்குள்ள உப்பு மனிதர்களின் பகை சார்ந்த வாழ்வியலை கண்முன்னே இட்டுச் செல்கிறது.
கதைக்களம், கதாபாத்திரங்களின் படைப்பு அனைத்தும் சிறப்பு. பகை, வெறி, கொலை, காதல், நெகிழ்ச்சி, வன்மம், காழ்ப்புணர்ச்சி, ஏமாற்றம், வன்முறை கலந்த கலவையாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சுவாரசியமான புனைநாவலுக்குத் தேவையான அனைத்து சாராம்சங்களும் இக்கதையில் நிறைந்தே உள்ளது. வாசிப்பின் முடிவில் நம் மீதும் சிறிது இரத்தவாடை வீசவே செய்கிறது.
"வேட்டை நாய்களின் அறம் வீட்டு நாய்களுக்குப் பொருந்தாது".
தமிழ் வந்த க்ரைம் த்ரில்லர் நாவலில் கவனிக்க படவேண்டிய நாவல்.கதைகளம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அதிகார போட்டி.வடசென்னை படப்பானியில் ஒரு நாவல்.கதாபாத்திரங்கள் அழுத்தம் நன்று ஆனால் இன்னும் சில பாத்திரத்துக்கு இடம் பற்றகுறை.வன்முறை &ஆபாச காட்சிகளை தவிர்க்க முடியவில்லை கேங்ஸ்டார் நாவலின் அவசியம் அப்படி.மொத்தில் விறுவிறுப்பான கதைகளம் நம்மை வெளி செல்ல விடாது.
Such a page turner. Excellent storytelling and narrative by Naran. The story did not get slow or boring for even a second. It was impossible to put down the book without completing it. I highly recommend reading it.
பகையும் கதையும் என்று அட்டை படத்தில் எச்சரிக்கை விடுத்த ஆசிரியர் நாவலினுள் நுழையும் அனைவருக்கும் வன்முறையை வாறி இறைத்திருக்கிறார் . வன்முறை கதைகளில் வரும் கலவியும், கொலைக்கொடூரமும் இந்த நாவலில் கொஞ்சம் கம்மியாக இருக்கின்ற போதிலும் எதிர்பாரா திருப்பங்களாலும், கதாபாத்திர வடிவமைப்பினாலும் , விறுவிறுப்பான ஒரு படைப்பை நமக்கு வழங்கியிருக்கிறார் . பொதுவாக நாளிதழ்களில் வெளிவரும் கதைகளில் கதாப்த்திர வடிவமைப்பும் , கதாபாத்திரங்களின் உணர்வுகளும் , உறவுகளும் பரிமாணமடையாமல் கதைப்போக்கிற்கு கண்டமேனிக்கு சில சமயம் காணாமல் கூடப்போகும் . கதை விறுவிறுப்பிறக்காக பல கதாபாத்திரங்கள் காரணமில்லாமல் கூட பழியாகும். அப்படி எந்தவொரு பழியுமில்லாமல் இருக்கும் கதாப்பாத்திரங்களை கொண்டே அவர்களின் சூழ்நிலை காரணங்களை வைத்தே நாவலை நகர்த்தியிறுப்பது அதுவும் விறுவிறுப்பை இம்மியளவும் குறையாமல் நகர்த்தியிறுக்கும் நேரத்திக்காக ஆசிரியரை பாராட்டியே ஆக வேண்டும் . கதாபாத்திரங்களிடையேயான உணர்வுகளை மிக எதார்த்தமாக நிஜத்துக்கு மிக அருகில் வைத்து கையாண்டிருக்கிறார். முதல் பாகத்தின் முடிவு இரண்டாம் பாகத்தின் மேல் மலையளவு எதிர்ப்பார்ப்பை நம்மில் தூண்டிய வாறே முடிகிறது . படிக்க ஒரு விறுவிறுப்பான நாவல் இது , ஒரு நல்ல விறுவிறுப்பான ஆக்ஷன் கதை விரும்பிகளுக்கு பரிந்துரைகக்கு ஏற்ற நாவல் இந்த வேட்டை நாய்கள் .