Jump to ratings and reviews
Rate this book

வாக்குமூலம்

Rate this book

95 pages, Paperback

Published January 1, 2012

29 people want to read

About the author

நகுலன்

14 books17 followers
Nakulan

நகுலன் (இ. மே 17, 2007) தமிழ் எழுத்தாளர். டி. கே. துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட நகுலன் பிறந்தது தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்தில் ஆனாலும் இறுதிவரை வாழ்ந்தது கேரளத்தின் திருவனந்தபுரத்தில். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்தில் முதுகலையும் ஆராய்ச்சிப் பட்டமும் பெற்றவர். திருவனந்தபுரம் இவானியர் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தமிழ்ச் சிறுகதைகளில் பல புதிய பரிசோதனைகள் செய்தவர். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன ஆங்கில இலக்கியத்திலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர். 'எழுத்து' இதழில் எழுதத் துவங்கியவர். இவர் தொகுத்த 'குருஷேத்திரம்' இலக்கியத் தொகுப்பு, தமிழில் மிக முக்கியமானதாகும். விளக்கு விருது, ஆசான் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் நகுலன்.


T. K. Doraiswamy (21 August 1921 – 17 May 2007), also known by his pen name Nakulan, was an Indian poet, professor of English, novelist, translator and short fiction writer, who wrote both in Tamil and English, and is known for his surrealism and experimentation as well as free verse. He served as Professor of English, Mar Ivanios College, Thiruvananthapuram for four decades.

During his literary career which started in his forties, when he started writing in Ezhuthu, a literary magazine founded by C. S. Chellappa, he wrote a novel and six books of poems in English, and nine novels and five books of poems in Tamil. His English work was mostly published under his real name, while Tamil works often appeared under his pen name. He also wrote briefly under the pen name, S. Nayar(?). His symbolic novel Ninaivup Patai Nilakal (1972) is considered a milestone in Tamil literature and established him as an avant garde novelist. His other notable works in Tamil include, Nizhalgal, Naykal, Naveenante Diary Kurippukal, Ezhuthu Kavithaikal, Iruneenda Kavithaikal, Antha Manchal Nira Poonaikutty, and in English, Words to the Wind, 'Non-Being' and 'A Tamil Writer's Journal'

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (21%)
4 stars
8 (57%)
3 stars
2 (14%)
2 stars
1 (7%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Mani Nesan.
7 reviews13 followers
January 26, 2022
ஆண்டு 2084.

தேச முன்னேற்றச் சட்டம் (286) : 65 வயதிற்கு மேற்ப்பட்ட ஆண்கள் அவர்கள் ஒப்புதல் வாக்குமுலம் அளித்தால் இலகுவான முறையில் மரணத்தை ஏற்கலாம். Terms and Conditions apply.

இப்படியான ஒரு சட்ட அறிவுறுத்தலுடந்தான் இந்த குறு நாவல் ஆரம்பிக்கிறது, எண்பது பக்கத்திற்குள்தான் இருக்கும் மொத்த நாவலுமே, ஒரு நீட்டமான சிறுகதை அளவுக்கு.

அரசு மற்றும் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டக்கூடிய தற்கொலைக்கான ஒரு சட்டம் அமுலுக்கு வருவதாகவும் அதை ஏற்க விரும்பும் ஒரு மனிதனைப் பற்றிய களம்.

தற்கொலை சார்ந்த தத்துவ விசாரணைகளுக்கு அப்பால், எனக்கு பிடித்தமான விடயம் அந்த சட்டத்தை அமுல் படுத்துவது சார்ந்த அரச நடவடிக்கைகள்தான், ஒரு சட்டம் எவ்வாறு இயற்றப்படுகிறதிலிருந்து அதன் செயல்வடிவத்தை நோண்டிகொண்டே போனால ஒரு அபத்தமான நிலைதான் எஞ்சும். 

நாவலின் எழுத்து நடைதான் சற்று சிக்கலாக இருந்தது எனக்கு. எதோ ஒரு ஆரம்ப draftஐ அப்படியே அச்சுக்கு அனுப்பியது போலத் தோன்றியது. நாவல் எழுதிய ஆண்டையே நகுலன் மறந்து விட்டதாக முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. எண்பதுகளின் நடுப்பகுதிகளாக இருக்கவேண்டும், முன் பின் முரணான கதை சொல்லும் ஆண்டுகளோடு சில தமிழ் வார்த்தைகளை அர்த்தம் தேடிப் பார்க்கும் அளவிற்கு இருந்தது. 

Heidegger, காந்தி, Kafka, பரிமேழகர் என்று ஓரே கலவையான குறிப்பிடல்கள், நகுலனுக்கு தமிழ் இதிகாச புராணங்கள் மற்றும் சித்தர் பாடல்களில் நிறைய ஈடுபாடு இருக்கவேண்டும், எல்லா அத்தியாயங்களில் அதன் நெடி பரவியிருந்தது. நகுலனின் கவிதைகள்தான் அடுத்ததாக வாசிக்கணும்.

108 reviews2 followers
March 12, 2023
வாக்குமூலம் - நகுலன்

ஒரு கிளாசிக் நாவல் என்று ஏன் எல்லோரும் இதை கூறுகிறார்கள் என்ற ஆர்வம் மேலோங்க நாவலை வாசிக்க துவங்கினேன்.

என்ன எழுத்து, பல கூறுகளை விவாதக்க வேண்டும், இன்னும் பலவற்றை தேட வேண்டும்.

இருத்தில் (exisctenciality) பற்றி வாசிக்க காப்காவையும் சேர்த்து இனி நகுலனும் வாசிக்க வேண்டும். இந்த நாவல் அதன் கூறுகள் தான்.

மொழி, மேற்கோள், தத்துவார்த்தம் அனைத்தும் மிக செளுமை!!!
Profile Image for Arun Narayanan.
5 reviews
September 24, 2024
தமிழில் இருத்தலியத்தை பற்றி எழுதப்பட்ட ஒரு முக்கியமான படைப்பாக நகுலனின் “வாக்குமூலத்தை” பார்க்கிறேன். பெரும்பாலும் இருத்தலியம் சார்ந்த எழுத்துகள் இருதலியதை மட்டும் பகுபாய்வு செய்யும் படி அமைந்திருக்கும், அதை சுற்றி இறுகும் கூறுகளை எழுத முன்வரமாட்டார்கள். ஆனால் இந்த நாவல் நான் யார் என்பதிலிருந்து சிந்தனைக்கும் செயலுக்கும் உண்டான தொடர்பு, தன்னையும் தன் மனதையும் தாண்டி போக நினைக்கும் எண்ணம், சிந்தனை அற்ற செயல்களின் அபத்தம், மனதிற்கும் உடலிற்கும் இறுகும் வேறுபாடு, வாழ்கைக்கும் மரணத்திற்கு உண்டான தொடர்பு, சிந்தனையை செயல் ஆக்க முடியாத அவல நிலை போன்ற இருத்தலிய கூறுகளை தத்துவார்த்த முறையில் நகுலன் இந்த நாவலின் மூலம் கேள்வியாக நம் முன் வைக்கிறார்.

படித்து முடித்ததும் பல பரிணாமங்களில் நம்முடைய வைக்கையை நாவலுடன் ஒத்து போக முடிகிறது. இதற்கு முழுக்க முழுக்க எதார்த்தமாக நாவலில் வரும் கட்சிகளும் கதாபாத்திரங்களே காரணம். நாவலில் ஒரு பகுதியில் ஏபிள் தாம்சன் சொல்கிறான் “ ஒருவன் கொல்லப்பட்டான். ஒருவன் அதை அப்படிச் சொல்லலாம்மென்றால் தன்னைத்தானே கொன்று கொண்டான்” என்று சொல்லிவிட்டு நிறுத்துகிறார். இதை தன் வாழ்வில் உண்பது , புணர்வது, தொழில் செய்வது என அனைத்தும் உடல் மூலம் விளைந்து மற்றும் இது என் உடல் சார்ந்தே இருக்கிறது இன்று என்னும் அங்கமுத்துவால் ஒருபோதும் புரிந்துக்கொள்ள முடியவில்லை மாறாக அங்கமுத்து “நான் என்பதே உள்ளம் உடல் என்றதின் பிணைப்பின் மூலம் விளைவது” என்கிறார். ஆனால் தன் சிந்தனையில் இருந்து மாறுபட்ட செயல் கொண்ட ராஜசேகரன் புரிந்துகொள்கிறான்.

நாவலின் வாக்குமூலப்பகுதியில் தன் வாழ்கையை பற்றின ராஜசேகரனின் பிதற்றலை நன்றாக உணர முடிகிறது. குறிப்பாக அந்த மஞ்சள் வெள்ளை நிற பூனையை வைத்து மனித உறவுகளின் பிணைப்பையும் அதன் தொடர்பின்மையியும் பகுத்தாய்ந்தது சிறப்பாக இருந்தது. நாவலின் கடைசியில் ராஜசேகரனின் வாக்குமூலம் அரசால் பிரசுகிக்க பட்டது ஒரு அபத்தத்தின் முடிவாகவே நான் பார்க்கிறேன்…

அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய நாவல்..
This entire review has been hidden because of spoilers.
Displaying 1 - 3 of 3 reviews