"ஏன் ஸ்வாமி, எனக்கு ரொம்ப நாட்களாக ஒரு சந்தேகம்?" - தன் மணாளன் முருகனிடம் தன் சந்தேகத்தைக் கேட்டாள் வள்ளி. "சொல், வள்ளி!" "அதென்ன உங்களின் எந்தத் திருத்தலம்னாலும், அதற்கு பக்தர்கள் நடந்து வருவதையே நீங்கள் விரும்புகிறீர்கள்?" "ஹ்ம்ம். உங்களுக்கு மாம்பழக் கதை தெரியும் அல்லவா?" "ஹோ! நன்றாக! அப்பழத்திற்காக நீங்கள் உலகைச் சுற்றி வர, உங்கள் தமையனோ அன்னையையும் அப்பனையும் சுற்றி வந்து அதை வாங்கிக் கொண்டார். நீங்கள் கோபித்துக் கொண்டு பழனிக்கு வந்துவிட்டீர்கள்" "எனக்கு சொகுசாய் எதையடைவதிலும் விருப்பமில்லை. சொன்ன சொல் மாறாது நேர் வழியில் தான் எதையும் அடையவேண்டும். அதனால் தான், என்னைப் பின்பற்றி என்னைப் பார்க்க நடந்து வரும் பக்தர்களின் குறைகளை குறைவ
மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு எழுத்து வடிவம் குடுப்பதே சற்று சிரமமாக உள்ளது.... உணர்வு குவியலின் மொத்த படைப்பும் புத்தக வடிவில்... பக்தி, உறவின் பிரிவு/இழப்பு/ஏக்கம், காதல் பரிமாற்றம்(பார்வைமாற்றம்)... நிச்சயம் வார்த்தைகளில் கோர்க்க முடியவில்லை!!!!!
audi , benz , bmw இன்னும் அறிமுகம் இல்லாத சொகுசு வாகனங்களின் பெயர்களை அறிமுக படுத்தி நாயர்களை வலம் வர செய்த, பெரும்பாலும் நடுத்தர இல்லத்தரசிகளை கண்ணில் எட்டா உலகிலேயே வாழ வைக்கும் குடும்ப நாவல் உலகத்தில் மிகவும் தனித்துவ படைப்பு.
சுட்டெரிக்கும் சூரியனின் தாக்கத்தில் வெடித்திருக்கும் சமமற்ற சாலையில் வெறும் காலில் பாதை யாத்திரையில் நாயகனின் அறிமுகம், கல்லிலும், முள்ளிலும் மலரும் காதல் பூக்கள்.... அப்பப்ப பெரும்பான்மை மக்களின் எதார்த்தமான வாழ்வு நடைப்பயணத்தில் உள்ளன, அந்த எதார்த்தத்தில் தொடங்கும் காட்சி..., கோவிலுக்கு செல்ல முடியாத ஊரடங்கில் நம் மனக்கண்ணில் பழனி ஆண்டவரை நிறுத்திய எழுத்தாளருக்கு என் வந்தனங்கள்.
நம் உறவிகளிடமும், நட்புகளிடமும் ஏன் அறிமுகமே அற்ற எந்த ஒரு மக்களுடனும் நாம் ஒரு சிறு நடை பயணம் செய்தால் ஒருவரை ஒருவரை புரிந்து கொள்ள உதவும் மிகவும் சுலபமான/இயல்பான ஒரு செயல், இது என்னுடைய அனுபவமும் எந்த ஒரு மனக்கசப்பும் அந்த பயணத்தில் கடந்து போகும்.
உறவுகளின் பலம் கை கோர்த்து பாலம் அமைத்து செல்லும் சிறு நடைப்பயணத்தில் வலு பெரும் ....
பாதையாத்திரையின் சிறப்பும், காவடி பற்றிய தகவல்களும் மிகவும் அருமை... தன்னார்வர்களின் சேவையும் அதை பதிவிட்ட விதமும் அழகு.. ஒரு முறையேனும் தை பூச நிகழ்வுகளில் பங்கு பெற தூண்டும் பக்தி படைப்பிற்கு நன்றி.
I have no words to express my feelings. Amazing I also walked with great devotion to Pazhani pathayatra. Minute details abt how to walk those 150 kms. Although I walked to Sabarimala yatra I missed this type of Yatra. Now it is too late for me becas I was now 73 yrs old. Thanks to the author by giving me the exact feel. Kandhanukku arohara!
All seethalashmi Madam novels are repeat worthy. This is no exception. From beginning to ending I told wow many times. One of the best story i ever read. Very simple story. But the writing is terrific. I feel like me also went to palani kovil. One of the best feel