உயிரை திருடும் அழகியே ... எமோஷன் , காமெடி, சஸ்பென்ஸ், காதல் என்று அனைத்தையும் உள்ளடக்கிய கதை .. கதை கதைக்குள் ஒரு திரைப்படம் ... அதற்குள் எல்லோராலும் வெகுவாக விமர்சிக்கப்பட்ட ..விரும்பிய ..ஒரு ரியாலிட்டி கேம் ஷோ என்று கதை அலுப்பு தட்டாமல் நகர்கின்றது ...
ஒரு நடிகை எந்தவொரு சூழ்நிலையிலும் நடிக்க வேண்டும் என்று அனன்யா நினைப்பது...நாம் சந்தோஷமாக இல்லாட்டி அதற்கு காரணம் நாம் தான் என்று வாழ்க்கையின் நுட்பத்தை சவீதாக்க கூறுவதாகட்டும் ... அனன்யா ஜேகே Tom and jerry fight என்று ...நான் ரசித்த இடங்கள் பல ...
காலம் எந்த காயத்தையும் ஆற்ற கூடிய ... மறக்க வைக்க கூடிய ...மாமருந்து ... சோசியல் மீடியாக்களில் கருத்து சொல்கிறோம் என்று நம்மை அறியாமல் எத்தனை பேரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கிறோம் !!! ஒருவரை விமர்சிக்குமுதல் நம்முடைய கருத்து பிறரை காயப்படுத்துதா என்று சிந்திக்க வேண்டும்
ஒரு காலத்தில் அனன்யாவை தூற்றியவர்கள் அவள் புகழின் உச்சியில் இருக்கும் பொழுது அனைத்தையும் மறந்து ஏற்றுக்கொள்வது உலகத்தின் நிதர்சனத்தை புரியவைப்பதாய்
அனன்யா —- கனவுகள் நிறைந்த காரிகை ..நிரம்ப அழகு , துணிச்சல் ...கொஞ்சம் திமிர் ... துரோகங்கள் நிறைந்த வாழ்க்கையை எதிர்நீச்சல் இட்டு கடந்த துணிச்சல்காரி ... காதலை கூட அடாவடியாக சொல்ல அவளால் மட்டுமே முடியும்..
ஜேகே —- ஒரு சிறந்த காதலன் கடைசிவரை அனன்யாவுக்கு அவள் அறிந்தும் அறியாத போதும் உறுதுணையாய் இருந்தவன் .. அதிலும் ஜேகே யாரென்பதில் ஆசிரியர் வைத்த ட்விஸ்ட் சற்றும் எதிர்பாக்காததொன்று
ஷ்யாம் — ஒரு நல்ல நண்பன் ..
சுபகரி, சுந்தரேஷ்வர் — ஒரு சாதாரண மிடில் கிளாஸ் உணர்வுகளை பிரதிபலிக்கும் பெற்றோராக..
விமல்— அனன்யாவிடம் மாட்டி முழிக்கும் ஒரு பாவப்பட்ட ஜீவன் ...
அர்ஜுன் — ஒரு சுயநலவாதி ...துரோகி ..
விக்ரமன் — தான் செய்த பிழையை நேர் செய்ய முயற்ச்சிக்கு ஒருவன்
கடைசியில் அவள் உணர்வுகளில் கலந்திருந்த ஜேகே தன் உயிரை திருடிய அழகியின் காதலுடன் ..