அழகை கொட்டிக் கொட்டி படைத்த உருவத்திற்குப் புத்தியை கொடுக்காமல் விட்டதால் தன்னைத் தானே துன்பத்தில் ஆழ்த்தி கொள்ளும் ஜென்மங்களை என்ன சொன்னாலும் பலன் இல்லை.
அழகு சந்தன சிற்பம் சுஜாதா படிப்பதற்காகச் சென்னை வர அதே கல்லூரியில் படிக்கும் மன்மதனையே தோற்கடிக்கும் ஆணழகன் நிரஞ்சன் கருத்தில் விழுந்து பிறகு கண்ணில் மாட்டி இருவரும் காதலிக்கின்றனர். இந்த ஆணழகன் வீட்டில் தான் அவளின் அம்மா வேலை செய்கிறாள்.உடம்பு முடியாமல் போக அம்மாவிற்குப் பதில் வேலை செய்ய வந்து காதலையும் வளர்த்து கொண்டிருக்கிறாள்.
அழகைகாட்டி வளர்த்த காதல், காதலனுடன் வேறு ஒரு பெண்ணை ஒரே கட்டிலில் பார்த்ததால் காதல் முறிந்து ஊரை விட்டே சென்றுவிடுகிறாள் நோயில் தாயை இழந்தபிறகு. அதே நேரத்தில் தன் தோழியின் இழப்பிற்குப் பிறகு அவளின் குழந்தையைத் தனது குழந்தையாக வளர்க்கும் சந்தன சிற்பம் யார் வீடு என்று தெரியாமலே நிரஞ்சன் பாட்டி வீட்டிற்கு வேலைக்கு வருகிறாள்.
காதலனுடன் எவளை கட்டிலில் பார்த்தாளோ அது அவனின் மாமன் மகன் மனோகர் மனோகரியாக மாறியவள் என்று தெரிந்த பிறகு அந்த ஆணழகன் இந்தச் சந்தன சிற்பத்தைக் கைக்குள்ளே கொண்டுவருகிறான்..
நடுநடுவே கோலம் போடுவது பூஜாடி அலங்கரிப்பது ,சமைப்பது எல்லாம் முக்கியக் கதாபாத்திரமாக வந்துபோகிறது.